பக்தவிஜயம்

ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீஹரி பக்தர்களின் வரலாற்று களஞ்சியம் இந்த பக்தவிஜயம் என்ற நூல். இது குரு வசிஷ்டரின் வம்சாவழியில் வந்த மஹிபதி என்பவரால் பல மகான்களால் எழுதப்பட்ட நூல்களிலிருந்து திரட்டி எடுக்கப்பட்டது.  அவரது கதைகளை நான், என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன்.

ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் முடிந்து கலியுகம் பிறந்ததும், பல விதங்களிலும் தர்மம் நிலை குலைந்து பொய்மையே வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்தனர். வேத அனுஷ்டானங்கள், சம்பிரதாயங்கள், எல்லாம் சீர் கெட்டு, பக்தி என்பதையே மக்கள் மறந்து வாழ்ந்தனர். இந்தனை கண்ட ஸ்ரீ ஹரி, தம் பக்தர்களையும், மக்களையும் காக்கும் பொருட்டு, தனது பக்தர்களை பல இடங்களில் பிறக்க செய்து, தாமும் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். எவ்வாறு தன் முந்தைய அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில், அருஜுனனுக்கு, கீதையை உபதேசிக்கும் பொழுது, "தர்மம் நிலை குலையும் பொழுதெலாம் நான் அவதரிப்பேன்" என்று கூறினாரோ அதே போல், கலியுகத்திலும் தான் புத்தராக அவதரிக்க போவதாக அறிவித்தார். தம் பக்தர்களையும் ஒவ்வோரிடத்திலும் பிறக்கும்படி கட்டளை இட்டார்.

அதன்படி பண்டரிபுரத்தில் உத்தவரையும் மதுராவில் அக்ரூரரையும், தாரூக் என்னும் பக்தரை ராமதாசராகவும் அவதரிக்க செய்தார். கிழக்கு ஜகந்நாதபுரியில் வியாசரையும், ஹஸ்தினபுரத்தில் வால்மீகியையும் அவதாரம் எடுக்க செய்து ஸ்ரீ கிருஷ்ண பக்தி வளர வழி செய்தார். 

ராமவதாரத்தில், வாரங்களாகவும், கிருஷ்ணாவதரத்தில் கோபாலர்களாகவும் அவதரித்த பக்தர்களை இந்த கலியுகத்தில் புத்த அவதாரத்தில் மேற் கூறியபடி, இந்தியாவின் நான்கு திசைகளிலும் மறுபடியும் பிறந்து மக்களிடையே பக்தியை வளர்க்குமாறு கட்டளை இட்டார்.  

ஸ்ரீஹரியின் கட்டளையால் மனம் மகிழ்ந்த பக்தர்கள் மனிதகுல நன்மைக்காக  உலகில் அவதரித்தனர். உத்தவர் நாமதேவராக பண்டரிபுரத்தில் தையல் வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறாக, சுகப்ரம்மம் முகமதிய இல்லத்தில் கபீராகவும், வால்மீகி, பிராமண இல்லத்தில் துளசிதாசராகவும், தாருகர், தாகூர் என்னும் இடத்தில் இராமதாசராகவும்   பிறந்தனர்.       


பின் சிவபெருமானை [ருத்ரன்] நோக்கி ஸ்ரீஹரி தங்கள் 'நரசிமேதாவாக ஜுனகாத் மக்களின் அறியாமையை விலக்கி பக்தியை வளர செய்யுமாறு வேண்டினார்.

ஸ்ரீஹரி தான் த்யாநேஸ்வரராக பிறந்து, பகவத்கீதையின் மகிமைகளை ஜுனகாத் மக்களுக்கு போதிக்க அவதரிபதாக கூறினார். அதேபோல் பிரமதேவர், சோபன் என்ற பக்தராகவும், சதாசிவன், நிவ்ருதி என்ற பெயருடனும், ஆதி மாயா முக்தாபாய் என்ற பெயருடனும் பிறந்தனர். இவ்வாறாக கலியுகத்தில், தர்மத்தையும், பக்தியையும் நிலைநாட்ட நம் தேசத்தில் அவதரித்தனர். 

இனி அவர்களின் மகிமைகளை பார்ப்போம்.      

பக்த கபீர்

ஸ்ரீஹரியின் விருப்பப்படி, பாகிரதி நதியின் நீரோட்டத்தில் மிதந்து வந்த சிப்பியானது மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில், கங்கையில் ஒரு முகமதியரின் கையில் கிடைத்தது. அந்த முகமதியர் ஓர் நெசவாளி. கங்கையில் அந்த மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில் தன் நேசவுக்கான நூல் கட்டுகளை அலசிக் கொண்டிருக்கையில் இந்த சிப்பி மிதந்து வருவதையும் அதனுள் இருந்து ஏதோ சப்தம் வருவதையும் அறிந்து அடுத்துப் பார்த்தார். அதனுள், ஓர் ஆழகான குழந்தை ராம நாமம் ஜபித்தபடி இருந்ததைக் கண்டார். ஆனந்தம் அடைந்த அவர், அக்குழந்தையை ஓர் துணியில் சுற்றி வீட்டிற்க்கு கொண்டு சென்றார். அதைக் கண்ட அவரது மனைவி குழந்தையை வாங்கி அன்புடன் மார்போடு அனைத்துக்க் கொண்டார். இறைவன் அருளால் அவள்ளுக்கு, அக்குழந்தைக்கு பாலூட்டும் பாக்கியம் கிட்டியது.  இச்செய்தி ஊரில் உள்ளோர்க்கெல்லாம் தெரிய வர அவர்கள் எல்லோரும் குழந்தையின் அழகையும், அதன் வாயில் இருந்து வரும் ராம் ராம் என்ற சப்தத்தையும் கேட்டு வெகுவாக வியந்தனர். மேலும் சிலர், ஓர் முகமதீனுக்கு எவாறு இக்குழந்தை கிடைத்தது? இது விஷ்ணுபக்தயுள்ள குழந்தையாக உள்ளதே என ஆச்சர்யப்பட்டனர். இன்னும் சிலர், இந்த கமால் பூர்வ ஜன்மத்தில் நிறைய புனியம் செய்தவனாக இருப்பான். அதன் காரணமாகவே இக்குழந்தை அவனுக்கு கிடைத்துள்ளது என பலவாறு பேசிக்கொண்டு சென்றனர். கமால் தம்பதியினர், அக் குழந்தைக்கு 'கபீர்' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

கபீர் நன்றாக வளரிந்து திருமண வயதை அடைந்தான். அவனுக்கு மனம் செய்வித்து தனுடைய நெசவுத் தொழிலையும் செய்யவைத்தார். ஆனால் கபீர் இறைவனின் நினைவைத் தவிர எந்தவித பற்றுதலும் இல்லாமல் இருந்தான். உயர்ந்தது தாழ்ந்தது என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லாம் இறைவன் சொத்துக்கள் என சம பதியுடன் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் தன் ஆடை நெய்வதற்காக  உட்கார்ந்த கபீர் சிறிது நேரத்திலேயே  ராம ஸ்மரனத்தில் முழ்கி விட்டார். அங்கு வந்த அவரது தாயார் கபீரின் நிலைக் கண்டு, அவரை உளுக்கி எழுப்பினார். மறுபடி தன்னிலை வந்த கபீர் துணி நெய்ய ஆரம்பித்தார். ஆனால் அவரால் சிறிது நேரமே அந்தப் பணியில் இருக்க முடிந்தது. மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னிலை மறந்தார். இதனைக் கண்ட ஸ்ரீ ராமன் பக்தவத்சலன் கபீரின் வேலையே தானே செய்ய கபீரின் இல்லம் வந்தார். கபீரின் வேலையை செய்யவும் ஆரம்பித்தார். கபீருக்கு சுய நினைவு வரும் பொழுது ஸ்ரீ ராமன் மறைந்து விடுவார். இவ்வாறே ஒரு வழியாக அந்தத் துணி நெய்து முடிக்கப்பட்டது. அதைக் கபீர் தாயிடம் கொடுக்க தாயின் ஆணைப்படி கடையில் விற்று பணம் வாங்கி வர சென்றார். ஆனால், பஜாரில் மற்ற வியாபாரிகளுடன் உட்கார்ந்த கபீர் மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னை மறந்தார்.

அந்தப் பட்டுத்  துணியைப் பார்த்தவர்கள், தங்களுக்கு அதை வாங்கும் வசதி இல்லததுபோல நினைத்து ஒருவரும் கபிரிடம் வந்து விலைக் கேட்க வில்லை. காரணம் இறைவனும் கபீரும் சேர்து நெய்த அந்த துணி அவர்களின் கண்களுக்கு மிக உயர்த பொருளாக தோன்றியது. அதனால், மாலை வரை யாரும் விலை கேட்டு முன் வரவில்லை. அந்தி நேரம் எல்லா வியாபாரிகளும் சந்தையை விட்டு போய்விட்டனர். கண்விழித்து பார்த்த கபீர் தன் பொருள் விற்கவில்லையே என நினைத்த அவருக்கு தாயின் நினைவு வந்தது. தாயார் கோபித்துக் கொள்வாரே என மிக வேதனை அடைந்தார்.

இரவு நெருங்கும் வேலையில் எதிரே ஓர் காலியான வீடு ஒன்றை கபீர் கண்டார். உடனே தன் வீட்டிற்கு போகும் என்னத்தை விட்டு அந்த காலியான வீட்டிற்கு நுழைந்தார். மறுபடி ராம ஸ்மரனையில் ஈடுபட்டார். கபீரின் நிலைமையைக் கண்ட இறைவன் அவரை சோதிக்க எண்ணி ஓர் வயதான பிராமணனாக தன்னை மாற்றிக் கொண்டு கபீர் இருந்த விட்டிற்குள் நுழைந்து தான் குளிரால் மிகவும் நடுங்குவதால் தனக்கு ஏதேனும் போர்த்திக் கொள்ள துணி கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அந்த வயதானவரின் நிலைக் கண்ட கபீர் தான் நெய்து கொண்டு வந்த துணியை பாதியாகக் கிழித்து வந்தவருக்கு கொடுத்தார். வந்த வரும் நன்றியுடன் வங்கிக் கொண்டு சென்றார். கபீரின் தயாள குணத்தை மேலும் உலகுக்கு உணர்த்த இறைவன் மறுபடி ஓர் பகிரியின் [பிச்சைக்காரன்] உருவை எடுத்து வந்து கபீரின் வீட்டு வாசலில் சிவந்த கண்களுடனும் கையில் ஓர் மனிமாலையுடனும், காலில் ஓர் ஆபரணமும் அணிந்து கொண்டு உள்ளே நோக்கி, ''உன்னிடமுள்ள உடையைக் கொடு. உருவமும் குணமும் இல்லாத ராமனை ஏன் துதித்துக் கொண்டுள்ளாய்" என கோபத்துடன் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே கேட்டான்.    அதைக் கேட்ட கபீர்,  ''உருவமில்லாத கடவுள் பக்தனுக்காக உருவத்துடன் தரிசனம் தருவான். அவன் குனதீதன், எல்லா குனங்கல்லுக்கும் அப்பாற்பட்டவன்'' என கூறினார். இதை எல்லாம் கேட்க விரும்ன்பாத பகீர் சீக்கிரம் அந்த துணியை தருமாறு நிர்பந்திக்க, கபீரும் அதனை அவருக்கு அளித்து விட்டு நிமதியாக மறுபடியும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்தார்.

கபீரின் மகிமையை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன் மறுபடி சோதிக்க எண்ணினான். உடனே ஓர் பிராமண உருவம் கொண்டு கபீரின் தாயிடம் சென்றார். அவரிடம், கபீர் சந்தையில் துணியை யார் கேடும் விலைக்கு விற்காமல் யாருக்கோ தனம் செய்து விட்டு அங்குள்ள ஓர் வீட்டிற்க்குள் உட்கார்ந்திருப்பதாக புகார் சொல்ல, கபீரின் தாய்க்கு முகுந்த கோபம் உண்டாயிற்று. கபீர் வீடிற்கு வந்ததும் சரியான தண்டனை தருவதாக கூறினார். ஆனால், அந்த பிராமணர், அவளை விடுவதாக இல்லை. மேலும், அவர், கபீர் அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வரமாட்டார், ஆகையால் தன்னுடன் வந்தால், அவர் இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறினார். ஆத்திரத்தில் உள்ள கபீரின் தாய் உடனே அவருடன் புறப்பட்டாள். கபீர் தங்கி உள்ள இடத்தை பிராமணர் சற்று தூரத்தில் இருந்து காண்பித்தார். கோபத்துடன் வீட்டினுள் நுழைந்த கபீரின் தாயார், கபீரை பார்த்து, ''எங்கே அந்த சால்வை?, கொடு என்னிடம்" என பலமுறை கேட்டும் உலகையே மறந்திருந்த கபீருக்கு இந்தக் குரல் கேட்கவே இல்லை. இதனால்  கோபமுற்ற தாய் செய்வதறியாது நிற்கையில் பிராமண ரூபத்தில் உள்ள ஸ்ரீ ஹரி ஓர் கம்பை கொடுத்து கபீரை அடிக்கச் செய்தார். கபீரின் மேல் விழுந்த ஒவ்வோர் அடியும் வெளியில் நின்றிருந்த அந்த பிராமணருக்கு வலி ஏற்படுத்தியது. கபீர் இந்த அடிகளுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதவராகவே மெய் மறந்திருந்தார். அந்தத் தாயின் அடிகளால் வலி பொறுக்காத இறைவன் அந்த பிராமண ரூபத்தை விடுத்து சீத சமேத ஸ்ரீ ராமனாக கபீரின் முன் தோன்றினார். அப்போதுதான் கண் விழித்த கபீர் சர்வலங்கார பூஷிதனாக வில்லேந்திய ராமனை சீதாதேவியுடன் கண்டு மகிழ்ந்து அவரது சரனத்தில் வீழ்ந்து வணகினார். ஸ்ரீ ராமனின் தோற்றத்தை கண்ட கபீரின் தாயும் உடல் நடுங்க அஞ்சலி செய்த வண்ணம் நின்றார்.  மேலும், ''தாயே நீ மிகவும் அதிர்ஷ்டம் ஆனவள்'' என ஆசிர்வதித்தார். அந்த தாயும் மகனை நினைத்து பெருமைப் பட்டு கபிரால் தனக்கு தெய்வ தரிசனம் கிட்டியதை நினைத்து கபிருடன் வீடு செல்ல புறப்பட்டாள். ஸ்ரீ ஹரியும் தன் பக்தனை ஆசிர்வதித்து மறைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கபீரின் தாயாரும் கடவுளின் த்யானத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். கபீரின் மனைவி கணவனுக்கு ஏற்றவளாகவே இருந்ததால் அவர்கள் இருவரும் எந்த ஒருக் கஷ்ட நஷ்டங்களையும் ஓர் பொருட்டாக எண்ணாமல் வாழ்கையை நடத்தி வந்தனர். இறைவன் அருளால் அவர்கள்ளுக்கு ஓர் மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு கமால் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். கமாலும் எல்லா நற்குணங்களும் பொருந்தியவனாக இருந்தான். கமால் தனக்கு 7 வயதாக இருக்கையில் தான் த்வாரகை செல்ல விரும்புவதாக கூறினான். சிறு வயதிலேயே அவனது அவனது இறை ஈடுபாட்டைக் கண்ட கபீர் உடனே அவனுக்கு அனுமதி கொடுத்தார். தாய் தந்தையாரின் அனுமதியுடன் கமால் தனது தவறாக பயணத்தை தொடர்ந்தான். வழியெல்லாம் ராம கானம் பாடியபடி துவாரகையை அடைந்தான். இடையில் கோமதி நதியில் நீராடி தன் முந்தைய பாவங்கள் தொலையவும், பிறப்பில்லாது தன்னை காக்குமாறு வேண்டி, அந்த நதியில் பல சடங்குகள் செய்து துவாரகையை அடைந்து இறைவன் சந்தியின் முன் நின்று வணங்கினான். நான்கு மாதங்கள் துவாரகையில் தங்கி, ஹரி கீர்தனன்களால் அங்குள்ள மக்களையும் மகிழ்வித்தான்.

மூன்று வேலையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்யாமல் கமால் இருந்ததில்லை. முடிவில், ஸ்ரீ கிருஷ்ணனிடம் தன் மறுபடி இங்கு வந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிராத்தித்து தன் பயணத்தை தொடர்ந்தான். வழியில் சித்திரகூடம் என்னும் ஓர் இடத்தில் ஒரு ஹரி பக்தனான வியாபாரி இவனை தன் இருப்பிடம் அழைத்துச் சென்று உபசரித்தான். மறுநாள், அவ்வூர் மக்கள் மத்தியில் ஹரி கீர்த்தனம் செய்து பின் மண நிறைவுடன் புறப்பட தயார் ஆனான். அப்போது அந்த வியாபாரி தன் அன்பின் பரிசாக கமாளுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என எண்ணினான். ஆனால், பணம் கொடுத்தால் கமால் ஏற்றுக் கொள்ளமாட்டான் என தெரிந்து ஓர் விலை மதிக்க முடியாத ஒளி மிகுந்த மாணிக்கக் கல் ஒன்றை அவனது காலடியில் சமர்ப்பித்து ஏற்ற்றுக் கொல்ல வேண்டினான். ஆனால் கமால் அதற்கு பல சமாதானங்கள் சொல்லி மறுத்து விட அந்த வியாபாரி கமாளுக்கு தெரியாது அவனது ஆடையில் முடிந்து வைத்து விட்டார்.

காசியில் தன் வீட்டிற்கு வந்த பிறகு இந்த மாணிக்கக் கல் தன்னிடம் உள்ளதை கமால் அறிந்து, நடந்ததை தன் தந்தையிடம் கூறி அதை அவரது காலடியில் வைத்தான். அதைக் கண்டதும் மிக்க வேதனை அடைந்த கபீர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவரது மனைவி அவரை சமாதானப் படுத்தி காரணம் கேட்டார். தன் மகன் ஏதோ ஒரு மறைமுக ஆசையால் தான் இந்த மாணிக்கத்தை கொண்டு வந்துள்ளான். ராம நாமைத்தை இந்த மாணிக்கக் கல்லுக்கு விற்றுள்ளான் என மிகவும் வேடனை அடைந்தார் கபீர். இதக் கேட்ட கமால், அந்த மாணிக்கக் கல்லை எடுத்துக் கொண்டு மறுபடி அந்த வணிகனைக் கண்டு அவனிடமே ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினான். இதைக் கண்ட பின்தான் தன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

ஒரு நாள் மாலை நேரம் யாத்ரிகர்களாக சில சாதுக்களும் சன்யாசிகளும் கபீரின் இல்லத்துக்கு வந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற கபீர் அவர்களை தன் வீட்டிலேயே அன்றிரவு தங்குமாறு வேண்டினார். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யுமாறு மனிவியிடம் கோரினார். அனால் வீட்டில் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் எதுவும் இல்லை. இதை அறிந்த கபீர் தன் மகனை, தன்னுடன் வரும்படி அழைத்துக் கொண்டு ஓர் கடைக்கு வந்தார். அங்கு வியாபாரி தூங்கிக் கொண்டிருந்தார். கடை அடைக்கப் பட்டிருந்தது. இதைக் கண்ட கபீர் வீட்டுக்கு சென்று கடையை வுடைத்து சாமான்களை கொண்டு வர தகுந்த ஆயுதங்களுடன் கடைக்கு வந்தார். கடையை உடைத்து இருவரும் உள்ளே சென்று சமையலுக்கு வேண்டிய சாமான்களுடன் ஒரு மூட்டைக கட்டிக் கொண்டு வெளியே வந்தார். அந்தக் கடையில் பணமும், துணி மணிகளும், இன்னும் மற்ற பொருள்களும் இருந்தன. ஆனால், அவர் அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் அன்றைக்கு சாதுகளுக்கு சமைத்து அன்னமிட தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டனர். கபீர் மூட்டயுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால், சிறுவனான கமாலின் மனம் தம் கடைக்காரரிடம் சொல்லாமல் போவது தவறு என தோன்றியதால், கடைக் காரரை எழுப்பி, "உன் கடையில் இரண்டு திருடர்கள் நுழைந்து சாமான்களை திருடிச் செல்கின்றனர்." என சொல்லி விட்டு தந்தையை பின் தொடர்ந்தான். விஷயம் அறிந்த கடைக் காரர், காமாலை விரட்ட, கமால் ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்து ஓட முயற்சித்தான். அப்போது இரு கல் தூண்கலுக் கிடையில் அகப் பட்டுக் கொண்ட அவன் உடல் ஓட முடியாமல் மாடிக் கொண்டது.
 

நாமதேவர்

ஒரு நாள் பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரையும் சுகரையும் அழைத்து பூமியில் அவதரிக்குமாறு கூறினார். இதைக் கேள்வியுற்ற இருவரும் தங்கள் கர்பவாசம் இல்லாமல் சுயம்புவாக பிறக்க அனுகிரகிக்குமாறு வேண்டினர். ஸ்ரீ ஹரியும் இரண்டு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே இருவரையும் சிறு குழந்தைகளாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் விட ஒன்று பாகிரதி நதியிலும், மற்றொன்று பீமாரதி நதியிலும் விழும்படி செய்தார்.

பாகிரதி நதியில் விழுந்த சிப்பிக்குள் இருந்த குழந்தை ராம் ராம் என ஜபித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்து சென்றது.   பீமாரதி நதியில் விழுந்த சிற்பி விட்டால் விட்டால் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. சுகர் ராம நாமத்தையும், உத்தவர் பாண்டுரங்க நாமத்தையும் உச்சரித்தனர்.

தாமாஜி என்ற விஷ்ணு பக்தர் அவ்வூரில் வசித்து வந்தார். அவர் ஒரு தையற்காரர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை, வயதும் ஆகி விட்டது. இருந்தாலும், அவரது மனைவி கோனாய், அவரை பண்டுரங்கனிடம் தமக்கு ஓர் குழந்தை வரம் கேட்கும்படி கூறினாள். அதைக் கேட்ட தாமாஜி, மனைவியின் அறியாமையையும், இந்த வயதில் இது வீன் ஆசை என்று கூரினர். இவ்வாறு மனைவியிடம் கூறிவிட்டு கோவிலுக்குச் சென்று மனைவியின் ஆசையை அவளுக்காக இறைவனிடம் பிராத்தித்துக் கொண்டு வந்து உறங்கினார். அப்போது, அவரது கனவில் இறைவன் தோன்றி, மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார். திடுக்கிட்டு எழுந்த தாமாஜி, இதைத் தன் மனைவிக்குக் கூறினார். 

மறுநாள் காலை பீமா நதிக்குச் சென்று நீராடி தன் நித்யக் கர்மாக்களை முடித்த தமாஜியின் கண்களில் ஓர் பேழைப் போன்று சிப்பி ஒன்று மிதந்து வருவதைக் கண்டார். வியப்பும், மகிழ்ச்சியும் கொண்ட தாமாஜி கடவுளின் அருளை நினைத்து பலவாறு துதித்து அப்பேழையை எதுதுத் திறக்க அதனுள் அப்பொழுதுதான் பிறந்தது போன்ற ஓர் ஆண் குழந்தை இருந்தது. உடனே குழந்தையை எடுத்து தன் மேல் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு விருது வீடு சென்றார். குழந்தையைக் கண்டதும் அவர் மனைவி பெருமக்ழிச்சி அடைந்து வாரி அணைத்துக் கொண்டார். உடனே அந்த வயதிலும் அவள் பால் ஊட்ட கடவுள் அனுக்ரஹித்தார். ஆசையோடும், அன்போடும் அனைத்துப் பால் ஊட்டி மகிழ்ந்தல் அவ்வன்னை. கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

ஒரு நாள். தாமாஜி தான் சந்தைக்கு போக வேண்டி இருப்பதால், வளர்ந்திருந்த நாமாவிடம், இறைவனுக்கு நெய்வேத்யம் குடுத்து அனுப்பும் படி மனைவியிடம் கூறினார். கொனாயும், மகனை அழைத்து பூஜை செய்யும் முறைகளைக் கூறி நெய்வேத்யம் படைத்து வீடு திரும்புமாறுக் கூறி, பூஜை சாமான்களுடன் அவனை பண்டரிநாதன் கோவிலுக்கு அனுப்பி வைத்தாள். நாமாவும், தாய் சொன்னதைப் போல இறைவன்னுக்கு நீரட்டி, மஞ்சள் ஆடை உடுத்தி சந்தன குங்குமம் பூசி, தூப தீபங்கள் காட்டி நெய்வேத்யமாக அம்மா கொடுத்ததை பண்டுரன்கனின் முன் வைத்து, 'பாண்டுரங்க, அப்பா சந்தைக்குப் பொய் உள்ளார் ஆகவே நான் வந்துள்ளேன். இந்த சாப்பாடை சீக்கிரம் சாப்பிடு' எனச் சொல்லி உட்கார்ந்துக் கொண்டான். இவன் வந்து சாப்பிடவில்லை. வேதனையும், அழுகையும் மேலிட நாம மறுபடி, மறுபடி வேண்டினான். 'அம்மா கோபிப்பாள்' எனச் சொல்லி அழுதான். அவனது அறியாமையும், அன்பையும் கண்ட இறைவன் உடனே வந்து அவனதுப் படையலை ஏற்றுக் கொண்டு அவனையும் அனைத்துக் கொண்டு விட்டு மறுபடி மறைந்தார்.

 வீட்டுக்கு வந்ததும் தாய் பிரசாதமாக நைவேத்யத்தை எதிர்ப்பார்த்தவள் பிள்ளை வெறும் தட்டுடன் வருவதைப் பார்த்து யாருக்கு உணவைக் கொடுத்தாய் என வினவினாள். குழந்தையும் நடந்ததைக் கூறினான். இதை அறிந்த தந்தை இதை நம்பாமல், மறுநாள், 'வா என்னுடன்' என மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனார். வழக்கப்படி பூஜைகள் செய்து விட்டு இன்றும் கடவுளை சாப்பிட அழைத்தான் நாமா. ஆனால் இறைவன், 'நாமா நீ தந்தையுடன் வந்துளாய், ஆகையால் நான் நேரடியாக வரமாட்டேன்.' என கூறினார். ஆனால் குழந்தை அடம் பிடித்து, 'இன்று நீ வந்து சாப்பிடாவிட்டால், என தந்தை எனை அடிப்பார்.' என சொல்லி அழ ஆரம்பித்தான். குழந்தையின் அழுகையால் இறைவன் அவனது அன்பிற்கு இணங்கி சிரித்தபடி வந்து உணவை அருந்தி தாமாஜிக்கும் தரிசனம் தந்து மறைந்தார். வியப்பும் ஆனந்தமும் பொங்க தாமாஜி, தம் மகனை அனைத்துக் கொண்டு, 'நீ என வீட்டில் பிறந்ததால் நான் பெரும் பாக்கியம் அடைந்தேன்.' என சந்தோசித்தார். வீடு சென்று மனைவியிடமும் நாமாவின் பக்தியால், தனக்கும் கடவுள் தரிசனம் கிட்டியதைக் கூறினார். இவன் ஹரியின் பெரும் பக்தன் என இருவரும் மகிழ்ந்தனர். 

நாமா வளர்ந்து பெரியவனானான். அவனது பெற்றோர்கள், அவனுக் கேற்ற நல்ல பண்புடன் கூடிய 'ராஜாயி' என்ற பெண்ணை அவனுக்கு மணமுடித்தனர். அவர்கட்க்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நாராயணா என்று பெயரிட்டனர். நாம எப்போதும் இறை சிந்தனயிலேயே இருந்தார். 

ஒரு நாள், நாமாவின் தாய், தன் பிள்ளையிடம், ''அப்பா, எங்களுக்கு வயதாகி விட்டது, நீ உன் குடும்பத்தை கவனிக்காது, என்நேரமும் விட்டால் பக்தியில் முழுகி இருந்தால் குடும்பத்தை கவனிக்க வேண்டாமா?'', என்று வேதனையுடன் கூறினாள்.


தாயின் வார்த்தைகளால், வேடனை அடைந்த நாமா, கோவில்லுக்குச் சென்று "பண்டரிநாதனிடம் விருப்பமில்லாது எனக்கு குடும்பக் வாழ்வை அழித்து இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பையும் கொடுத்தாயே ஹே பண்டரி நாதா, நான் உன்னைத் தவிர யாதொன்றும் அறியேனே", என்று பலவாறு வேதனையுடன் பிராத்திக்க, பண்டரி நாதன் சிரித்தவுடன், "நாமா, nii என கவலைப் படுகிறாய், நீ வேறு நான் வேறு அல்லவே" எனக் கூறி சமாதானப் படுத்தினார். ஆனால், நாமா, "ஈஸ்வரா, நீயும் நானும் எப்படி ஒன்றாக முடியும். நீ பாற்கடலில், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன், சர்வ அலங்காரபூஷிதனாய், தங்கத் தட்டில் சாப்பிடுகிறாய். என் வீட்டிலோ, உடுக்க உடையும் சரியாக இல்லை, உன்ன உணவும் இல்லை. இப்படி இருக்கையில், என வேதனை உனக்கு புரியவில்லையா" எனக் கூறினான். மாயக் கண்ணனான பண்டரிநாதன் புன்னகையுடன் மறைந்தான். 


வீட்டில், நாமாவின் மனைவி, தன் மாமியுடன் தனது கஷ்டத்தை கூறி வேதனைப்பட்டாள். இந்த வீட்டில் தனக்கு எந்த சுகமும் கிட்டவில்லை என ஆதங்கத்துடன் கூறினாள். பண்டரிநாதன் ராஜாயியின் வேதனையைப் புரிந்துக் கொண்டு ஒரு வியாபாரிப் போல வேடமிட்டு, ஒரு எருதின் மேல் கை நிறைய தங்கக் காசுகளுடன், நாமா கோவிலில் இருகயிலேயே நாமாவின் வீட்டைத் தேடி வந்தார். அவ்வீதியில் உள்ளவர்கள், துளசி செடி நிறைந்துள்ள ஓர் குடிலில் ஸ்ரீ பண்டரி நாதனுக்கு துளசி மாலை சூடி உள்ள வீடே நாமாவின் வீடு என அடையாளம் காட்டினர். அவ்வீட்டு வாசலில் நின்று கொண்டு நாமாவின் நண்பன் வந்திருக்கிறேன் என்று கூறினார். வேதனையுடன் இருந்த ராஜாயி, ''எங்கள்ளுக்கு யாரும் நண்பரோ உறவினரோ  இல்லை என்றும். மேலும் எஜமானர் வீட்டில் இல்லை" என கதவின் பின் இருந்தவாறு கூறினாள். இதைக் கேட்ட ஸ்ரீஹரி, "சீக்கிரம் வெளியில் வாருங்கள், என பெயர், கேசவ் சேத், நான் நாமாவின் தோழன். உங்கள் வீட்டில் உணவு இல்லை. நீங்கள் மிகவும் கஷ்டப்படுவதை கேள்வயுற்று தங்க நாணயங்கள் கொண்டு வந்துளேன், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றுக் கூற. உடனே ராஜாளி அவரை வரவேற்று உட்காரும் படி கூற, அவர் கொடுத்த தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டார். மேலும் இருந்து உணவு அருந்திச் செல்லுமாறு வேண்டினாள். அனால் வந்தவர், ''நாமா இல்லாமல் தன் அருந்த விரும்பவில்லை'' எனக் கூறி உடனே சென்று விட்டார். 

இது எதுவும் அறியாத நாமாவின் தாய் கோவிலுக்குச் சென்று ஹரியே சர்வம் என்ற மயக்கத்தில் இருந்த நாமாவை பலவாறு நிந்தித்து வீட்டுக்கு வரும்படி அழைத்தார். தன் நிலை மறந்திருந்த நாமாவிற்கு எதுவும் தெரியவில்லை. நாமாவின் தாய் கோனாய்க்கு பண்டரிநாதன் மேல் கோபம் திரும்பியது. தன் மகனை இறைவன் தன் அடிமை ஆகிக்கொண்டு தன்னையும் அவன் குடும்பத்தையும் கஷ்டத்தில் ஆழ்தியது இந்த பாண்டுரங்கனே என பலவாறு நிந்தித்தால். அவளது மகனின் மேல் உள்ள அன்பே அவளது கோபத்திற்கு காரணம் என அறிந்த பாண்டுரங்கன் அவளை நோக்கி, ''உன் மகனை நி அழைத்துச்செல்'' என்று கூறி மறைந்தார். 

நாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் கோனாய். வீட்டில் மருமகள், ராஜாயி சமைத்து வைத்துக் கொண்டு அலங்கார அணிமணிளுடன். இருந்ததைக் கண்டனர். இருவரும் கரணம் கேட்க, ராஜாயி வந்த வணிகரின் உதவிகளைக் கூறி கணவனின் நண்பனான 'கேசவ சேத்' கொடுத்ததாகக் கூறி தங்க நாணயப் பையை காட்டினார். நாமாவிற்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீ பண்டுரன்கனே தனக்காக, கேசவ சேத் ஆகா வந்துள்ளார் என ஆனந்தக் கண்ணீர் பொங்க கூறினார். மேலும் இந்தத் தங்க நாணயங்களை எல்லோருக்கும் வாரி வழங்குமாறு கூறிவிட்டு, உத்தவரின் மறு அவதாரமான நாம மறுபடி ஸ்ரீ பாண்டுரங்க மகிமைகளைப் பாடிக் கொண்டு ஆலயம் சென்றுவிட்டார்.


ஜெய் ஸ்ரீ நாமதேவ !!


துளசிதாசர்

திரேதாயுகத்தில் வால்மீகி ராமாயணம் எழுதிய ராம பக்தர், இக்கலியுகத்தில், ஹரியின் மகிமைகளை பாட்டுக்களாக எழுதி, பாடி மக்களிடையே பக்தியைப் பரப்புவது ஸ்ரீஹரியின் விருப்பப்படி ஹஸ்தினாபுரம் என்னும் ஊரில், கநூஜ்,  ஓர் அந்தணர் வீட்டில் மறுபடி பிறந்தார். அவரது தந்தை, ஆத்மாராம், ஓர் வேதவித்து. அவர், அக்பரின் அரண்மனையில் இருந்தார். அவர், தம் குழந்தைக்கு சாஸ்திரப்படி கிரியை செய்து, துளசிதாஸ் எனப் பெயரிட்டார். பின், வேதமுறைப்படி, துளசிதாசருக்கு உபநயனம் செய்து வேதங்களை கற்பித்தார். துளசிதாசரும் 12  வருடங்கள் பிரமச்சரிய விரதம் மேற்கொண்டு, வேதங்களை நன்கு படித்தார். மற்றும், ஸ்ரீகிருஷ்ண பக்தி நிறைந்தவராகவும் விளங்கினார்.

காலக்ரமத்தில், ஆத்மாரம் தன் புதல்வருக்கும், அழகும், பண்பும் நிறைந்த மமதா என்னும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வித்தார்.  இருவரும், மனம் ஒத்த தம்பதிகளாய் இருந்தனர்.

ஒருநாள், அக்பர் துளசிதாசரை அழைத்துக்கொண்டு யாத்திரைக்கு புறப்பட்டார். அவர் சென்றபின், மம்தாவின் தாயார் வீட்டிலிருந்து வந்த ஒருவர், மம்தாவின் தாயாருக்கு உடல்நலம் இல்லை என்றும், உடனே, மமதாவை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக செய்தி சொன்னார். கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் அவரிடம் சொல்லாமல் போகத் தயங்கினாள். பின், துளசிதாசரின் பெற்றோரின் அனுமதி பெற்று தாய் வீடு சென்றாள். யாத்திரை சென்று வீடு திரும்பிய துளசிதாஸ், தன் மனைவியைக் காணாது, பெற்றோரின் மூலம் விவரம் அறிந்து உடனே தன் மனைவியைக் காணப் புறப்பட்டார். கொட்டும் மழையையும், யமுனா நதியின் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் 10km நடந்து, தம் மனைவியின் வீடு சேர்ந்தார். இரவு நேரம் ஆகி விட்டதால், அவரது வீட்டுக் கதவுகள் பூட்டி இருந்தன. காவலர்களும் உறங்கிவிட்டனர். வழி தெரியாமல் நின்ற துளசிதாசருக்கு, மேல்தளம் இருந்து ஓர் கயிறு தொங்குவதுப்போல் தெரியே, அவர், அதைப் பற்றிக்கொண்டு மேல்தளம் சென்றடைந்து மனைவியின் அருகில் சென்று நின்றார். திடுக்கிட்டு எழுந்த அவர் மனைவி திகிலுடன் தன் கணவரை நோக்கி, 'எவ்வாறு இந்த நேரம் இங்கு வந்தீர்கள்?' என்று கேட்க, துளசிதாசர், 'எனக்காக, நீ மேலே இருந்து போட்ட கயிற்றின் மூலம் ஏறி வந்தேன்.' என்றார். மேலும், அதிர்ச்சி அடைந்த மம்தா, ஒன்றும் புரியாதவளாக, அந்தக் கயிறு எங்கே என்று காட்டுமாறு கூறினாள். அவள், தன் கணவருடனும், மற்ற வேலை ஆட்களை அழைத்துக் கொண்டு தீபம் ஏற்றிக் கொண்டு கயிறு இருக்கும் இடம் பார்க்கக் சென்றார். துளசிதாசர் காட்டிய கயிற்றைக் கண்ட மம்தா திடுக்கிட்டார். அது கயிறல்ல, ஓர் நீளமான கொடிய விஷப் பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் பயத்தினால் நடுங்கி ஸ்தம்பித்து நின்றனர்.

மிகுந்த வேதனையுடன் மமதா தன் கணவனை நோக்கி 'பிரபு நீங்கள் இந்த நள்ளிரவு வேளையில் தாய், தந்தையாரைப் பற்றி கவலைப்படாது, உங்கள் நலம் பற்றியும் என்னாது என்மேல் இருக்கும் அன்பினால் வந்துள்ளீர்கள். இந்த கொடிய பாம்பு உங்களைத் தீண்டீ இருந்தால் என்னாவது? பெண்ணாசை மிகவும் கொடியதும், வேதனைப் படுத்துவதும் ஆகும். ராவணனும், இந்திரனும் கேட்டது பெண் ஆசையினால்தான். உலக ஆசைகளில் மனதை செலுத்தாமல், ஸ்ரீராமநாமத்தில் லயித்து, கானம் செய்து அவன் புகழ்பாடுவதன்றோ உத்தமம் என்று பலவாறு கூறியதைக் கேட்டு துளசிதாசருக்கு தன் பிறப்பின் காரணம் புரிந்தது. அந்தக் கணமே அவர் மனைவியை விட்டு விட்டு, கானகம் நோக்கி ராம ஸ்மரனையுடன் நடக்கலானார். இவ்வாறாக நடந்து, நடந்து காசி வந்தடைந்தார். பாகிரதி நதியில் நீராடி, உதிர்ந்த இலைகளை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இவ்வாறாக ஒவ்வொரு நதிகளிலும் நீராடி தன் கமண்டலத்தில் எஞ்சி உள்ள நீரை வழியில் உள்ள செடிகளுக்கு ஊற்றி ராம கானம் செய்துக் கொண்டு 12 வருடங்கள் கழித்தார். 

ஒரு நாள், துளசிதாசர், ஓர் ஓடையில் நீராடிவிட்டு தன் கமண்டல நீரை ஓர் மரத்தின் வேரில் ஊற்ற, திடீரென அம்மரம் பிளந்து ஒரு ராட்ஷசன் அவர் முன் நின்று இரு கைகளையும் கூப்பியபடி வணங்கி நின்றான். மேலும், அவரை நோக்கி, "சுவாமி, நான் மிக்க மகிழ்வடைதுள்ளேன், ஏனெனில், எங்களைப் போன்ற மரங்கள் வேர் எந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் அருந்தக்கூடாது என்பது சாபம். நான் மிகவும் தாகமாக இருந்த வேலையில், தாங்கள் ஊற்றிய இந்த நீர் ஏன் தாகத்தை தீர்த்து. ஆகையால் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள்" என்றது. ஆச்சரியம் அடைந்த துளசிதாசர், "அப்பா, நான் ஸ்ரீராமனின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருகிறேன், எனக்கு வேறொன்றும் தேவையில்லை" என்றார். இதைக் கேட்ட அந்த பிரம்மா ராட்சஷன், "சுவாமி, நான் அந்தப் பெயரை சொன்னால் பஸ்மம் ஆகி விடுவேன். ஆதலால், தாங்கள் ஹனுமனை பிரத்தனை செய்தால் அவர் மூலம் இறை தரிசனம் கிட்டும். எங்கெல்லாம் புராணங்கள் பாடப்படுமோ அங்கல்லாம் ஹனுமான் கண்டிப்பாக வருவார். அவர் அந்த இடத்திற்கு எல்லோருக்கும் முன்பாக வந்து, எல்லோரும் சென்றபின் அவ்விடம் விட்டுச் செல்வார். வயதான அவர் பழைய துணி அணிந்திருப்பார். தலையில் குள்ள இருக்கும்." என அடையாளங்களைச் சொல்லி அந்த பிரம்மா ராட்சசன் மறைந்தான.

மறுநாள் துளசிதாஸ் நீராடி,உபன்யாசம் செய்யும் இடம் தேடி சென்று அமர்ந்தார். அவ்வேளையில் ஓர் வயதான உருவம் ராட்சஷன் சொன்ன அடையாளங்களுடன் வந்து அமர்ந்தது. அதைக் கண்டதும் துளசிதாசரும், இவர்தான் மாருதி என அடையாளம் கண்டு கொண்டார். உபன்யாசம் முடிந்தபின், எல்லோரும் சென்றபின் மாருதி வேகமாக வெளியேற, துளசிதாஸ் பின் தொடர்ந்தார். நீண்ட நேரம் நடந்த பின், மாருதி நின்று, 'நீ யார், ஏன் என்னை பின் தொடர்கிறாய்?' எனக்க கேட்க்க, துளசிதாசர், மாருதியின் இரு கால்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டு, கண்ணீர் மல்க தமக்கு 'ராம தரிசனம்' காண அருள் புரிய வேண்டினார். 


தம் ஞான திருஷ்டி மூலம், துளசிதாசர் வேறு யாரும் இல்லை, சாட்சாத் வால்மீகியின் மறுபிறப்பே என தெரிந்து கொண்ட மாருதி, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவருக்கு நிச்சயம் ராம தரிசனம் கிட்டும் என அருள் புரிந்தார். 

ஹனுமான் ராமனை பிராத்தித்து துளசிதாசருக்கு கட்சி தருமாறு வேண்டினார். ஸ்ரீ ராமனும் துளசிதாசருக்கு தரிசனம் தருவதாக சமதித்தார். 

மறுநாள் வானரப்படையுடன், ஸ்ரீ ராமர் ஓர் அரசனைப் போலே முன் செல்ல துளசிதாசரின் குடிலைக் கடந்துக் சென்றனர். அதைக் கண்ட துளசிதாசர், யாரோ முகமதிய அரசன் தன் படையுடன் செல்வதாக நினைத்து வணக்கம் செலுத்தினார். மறுநாள் ஆஞ்சநேயர், துளசிதாசரிடம் வந்து உன் விருப்பம் பூர்த்தி அடைந்ததா என்று கேட்டார். துளசிதாஸ், தன் காணவில்லை எனக் கூற, நேற்று வானரப்படையுடன் வந்தவரே ஸ்ரீ ராமன், எனக் கூறினர். ஆனால், துளசிதாசரின் மனம் திருப்தி அடையாததால், ஸ்ரீ ராமனை வில் தாங்கிய பீதாம்பரதாரியாக காண வேண்டும் என பிராத்தித்து தனக்கு மறுபடியும் ராம தரிசனத்திற்கு அருள் புரிய மன்றாடிக் கேட்டுக்கொண்டார். மனம் இறங்கிய ஹனுமான், மறுபடி ராமனைத் துதித்து, வால்மீகியின் அவதாரமான துளசிதாசருக்கு மறுபடி அவர் விருப்பப்படி அருள வேண்டினார். ஹனுமானின் வேண்டுகோளை கேட்ட ஸ்ரீ ராமன், 'அஞ்சநேய!, உன் பக்தியின் மகிமையும், உன் கருணை உள்ளமும் என்னை நெகிழச்செய்தாலும், இந்தக் கலியுகத்திற்கு ஏற்றார்போல்தான் தரிசனம் தர இயலும்.' என்றார். அதற்க்கு ஹனுமான், 'ராமா உன் ஆணைப்படி வால்மீகி துளசிதாசராக அவதரித்துள்ளார். உன் பெருமைகளைப் பரப்புவதே இந்த பிறப்பில் நீ அவருக்கிட்ட கட்டளை. ஆகவே, நீ துளசிதாசரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.' என வேண்டினார்.

ஸ்ரீ ராமனும் ஹனுமானின் கோரிக்கைப்படி துவாபரயுக ராமனாக சீதாவுடனும்,லக்ஷ்மனனுடனும் மாருதியுடன் புறப்பட்டார்.மாருதியும் முன் சென்று துளசிதாசருக்கு ஸ்ரீ ராமனின் வருகையைக் கூறினார்.    மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது குடிலின் முன் வந்த ஸ்ரீ சீதா ராமனை லக்ஷ்மனனுடன் கண்டுமனமகிழ்ந்து கிழ்ந்து  நமஸ்கரித்தார்.மாருதியும் துளசிதாசரின் அவதாரப் பணியை இக்கலி யில் பூர்த்தி செய்ய ஸ்ரீராமனை துளசிதாசரின் தலையில்  கை வைத்து ஆசீர்வதிக்க கோரினார். ஸ்ரீ ராமனும் துளசிதாசரை ஆசீர்வதித்து மறைந்தார். 

அதன்பின் அந்த காசி நகரில் துளசிதாசரின் ராமகானம் எல்லா திசைகளிலும் பரவி எல்லோரும் ராமபக்தியை பூரணமாக  அனுபவித்தனர். இவாறாக காசி வாசிகள் துளிசிதாசரின் பக்தர்களாகவும், சீடர்களாகவும் மாறி அவருடையத் தேவைகளை கவனித்துக் கொண்டனர். 

ஒரு நாள், ராம பஜனை நடந்து முடிந்த பின் பக்தர்கள் வீடு திரும்பினர். இரவு குடிலின் கதவுகள் திறந்தே இருக்க துளசிதாசரும் அவரது சிஷ்யர்களும் படுக்கச் சென்றனர். இதை கவனித்த இரு திருடர்கள் துளசிதாசரின் குடிலுக்குள் நுழைந்து தமக்கு வேண்டிய மட்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர அங்கே அம்பும் வில்லும் ஏந்தி இரு காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு பயந்த திருடர்கள் மறுபுறம் உள்ள வாழல் வழியே வெளியேற முற்பட அங்கேயும் இது போன்றே வில்லும் அம்பும் ஏந்திய இருவர் காவல் புரிந்து கொண்டிருந்தனர். செய்வதறியாத திருடர்கள் விடியும் வரை அங்கேயே இருந்து விட்டு வெளிச்சம் வரும் முன் வெளியேறலாம் என திட்டமிட்டு காத்திருந்தனர். அவாறே விடியும் நேரம் காவலாளிகள் வீடு சென்றிருப்பார்கள் என எண்ணி, வெளியேற முயர்ச்சிக்கையில் கையில் அம்புடன் இவர்களைக் குறி வைத்து காத்திருந்தனர். மிகவும் பயந்த அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பொருள்களையும் கீழே போடும்படி கட்டளை இட்டனர்.

விடிந்ததும் எல்லோரும் எழுந்து தங்கள் வேலைகளை கவனிக்க சென்றார்கள். அப்போது துளசிதாசரை கண்ட திருடர்கள் அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பின் நடந்த விவரங்களையும் சொன்னார்கள். துளசிதாசர் சந்தேகமுற்று தம் சிஷ்யர்   களை அழைத்து யார் இவர்களைப் போகவிடாமல் தடுத்தது, என வினவினார். சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாங்கள் யாரும் அப்படி செய்யவில்லை', என்றனர். அப்போது, அந்த திருடர்கள், இவர்கள் யாரும் இல்லை, கரிய உருவமுடன் தலையில் கிரீடமும், கையில் வில்லும் அம்பும் ஏந்திய இருவரே காவல் செய்ததாக கூறினர். இதைக் கேட்டதும் துளசிதாசருக்கு உண்மை புலப்பட்டது. ஸ்ரீ ராம லக்ஷ்மரே நம் வாயில் காப்பவராக வந்துள்ளனர், என்பதி புரிந்துக் கொண்டு கண்களில் கண்ணீர் தரையாக வழிய 'ஒ ராம்!. பால் கேட்ட உபமன்யுவிற்கு பால் கடலையே கொடுத்தாயே ! கல்லாய் இருந்த அகல்யாவிற்கு மோட்சம் அளித்தாயே, விபீஷனுக்கு அவனுடைய அன்புக்கு பரிசாக தங்க நகரமான இலங்கையை அளித்தாயே. இப்போது என குடிலுக்கு காவலை இருந்து என இந்தத் திருடர்களின் ஆசைக்கு தடை செய்தாய்? கருணாமூர்த்தி, இங்கு இருப்பவை எதுவும் எனதென்று ஒன்றும் இல்லை அல்லவா? எல்லாம் உன்னுடயதுதானே? நீயின்றி என்னக்கு வேறு எது சொத்து. ராகவ, உன் அன்பிற்கும் கருணைக்கும் எல்லையே இல்லை', என பலவாறு துதித்தார். சுற்றி இருந்த எல்லோருக்கும் அவரது பக்தியும் ராமனின் பெருமைகளும் புரிந்தன. முக்கியமாக இந்த இரு திருடர்களும் மனம் மாறினார். துளசிதாஸ் அவர்களிடம் வேண்டிய அளவு செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தும் அவர்கள் அவரது ஆசிகலையே வேண்டினார்கள். தங்களது அறியாமைஐயும், பாவங்களையும் மன்னித்து அருளுமாறு கூறி, அவரது மகிமையால் தமக்கு ஸ்ரீ ராமலக்ஷ்மண தரிசனம் கிடைத்ததே பெரும் செல்வமாக கருதுவதாக கூறி, தங்களையும் அங்கேயே தங்க அனுமதிக்குமாறு வேண்டினார்கள். துளசிடசரும் மிக்க மகிழ்வுடன் ராமபக்தர்கலாக ஏற்றுக்கொண்டார்.

ஒருநாள் ஆஷ்ரமத்தில் எல்லோரும் உணவு அருந்த உட்கார வாசலில் ராம் ஜெய்சீதாராம் என்ற குரல் கேட்டது. வாசலுக்கு வந்த துளசிதாசரிடம் வாசலில் இருப்பவர் தான் ஒரு பிராமணனைக் கொன்ற கொலையாளி என்றும் தமக்கு உணவு தருமாறு கேட்டார். உடனே துளசிதாசர் அவரை மரியாதையுடன் அழைத்து வந்து தம் அருகில் அமரச் செய்தார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.

சிஷியர்கள், தங்கள் எல்லோருக்கும் சமமாக ஒரு கொலையாளியை எவ்வாறு  அமரச் செய்தார் என வினவ, தாசரும் அவர் எபோது ராம்-சீதா என சொன்னாரோ அப்போதே அவர் பாவங்களை எல்லாம் நெருப்பில் இட்ட தூசிபோல் ஆகிவிட்டது. அதனாலேயே அவர் இங்கு உட்கார அருகதை உள்ளவராக எனக் கூறி சமாதனப் படுத்தினர். ஆனால் மற்றவருக்கு இந்த பதில் திருப்தியாக இல்லாததால் தாசரிடம் ஒரு கல்லான எருதுக்கு இந்த ராம் பிரசாதத்தை தங்கள் கொடுத்து உண்ணச் செய்தால் அவரது இந்தச் செயலை தங்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்கள். உடனே தாசர் அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு தட்டின் நிறைய உணவை எடுத்துக் கொண்டு கிளம்ப எல்லா பிராமணர்களும் அவரை பின் தொடர்தனர். 

கோவினுள் சென்ற துளசிதாசரும் ஸ்ரீ விஸ்வேஸ்வரை பலவாறு துதித்து சிவனின் முன் நின்ற கல் நந்தியிடம் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, கல் நந்தியும் பெருமூச்சு விட்டு எழுந்து வந்து இலையோடு அந்த உணவை உன்றுவிட்டு மறுபடியும் கல் நந்தியாக மாறிவிட்டது. இந்த ஆச்சர்யத்தைக் கண்ட எல்லோரும் ஈசன் புகழ் பாடி வணங்கி துளசிதாசருக்கு வணக்கம் செலுத்தி தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது என்பது துளசிதாசரின் இச்செயலால் எல்லோரும் உணர்தனர்.

சில தினங்கள் சென்றன. அந்த ஊரில் ஜெயித்பால் என்ற வணிகன் இறந்துவிட்டான். துக்கம் தாளாத அவனது மனைவியும் அவனுடன் உடன் கல்லாய் ஏற தீர்மானித்தால். ஊருக்கு வெளியே தீ மூட்ட ஏற்பாடாகியது. அவனது மனைவி, அவனுக்கு பிரியமான வஸ்துக்களுடன், தானும் அவனுக்கு பிரியமானவள்  ஆகையால் இந்த முடிவு செய்தல். போகும் வழியில் துளசிதாசரின் குடிலைக் கண்ட அவள், உள்ளே சென்று துளசிதாசரை வணங்கினாள். ராம ஸ்மரனையுடன் இருந்த தாசர் '8 குழந்தைகள்ளுக்கு தாய் ஆவாய்', என்று ஆசீர்வாதித்தார். வேதனையுடன் திடுக்கிட்ட அவள் அழுகையோடு தன் நிலையை அவரிடம் கூறினாள். அதைக் கேட்டு துளசிதாசர், 'அம்மா, இது ஸ்ரீராமனின் வாகாக நான் நினைக்கிறேன். நானாக கூறவில்லை. ஆகையால் ஸ்ரீராமனின் வாக்கு பொய்க்காது.' என்றார். அந்தப் பெண் மறுபடியும் அவரை நமஸ்கரித்து விட்டு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டாள்.  அங்கு அவள் அடைந்ததும் அவள் கண்ட காட்சி, மகனின் வார்த்தைகள் உண்மை நிதர்சனமாகி உள்ளதை அறிந்தாள். அவள் கணவன் உறக்கத்தில் இருந்து எழுந்தது போல் எழுந்திருந்தான். இன்ப அதிர்ச்சியுடன் அவள் தான் கணவனிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஆஷ்ரமம் நோக்கிச் சென்று மறுபடி துளசிதாசருக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். தாசரும் அவர்களுக்கு ராம நாமத்தின் மகிமைகளைச் சொல்லி ராம கானம் ஜபம் செயுமாருச் சொல்லி ஆசீர்வதித்தார். 

தில்லியின் அரசராக இருந்த அக்பருக்கு துளசிதாசருடைய இந்த மகிமைகள் தெரிய அவர் உடனே தாசரை தன் அரண்மனைக்கு அழைத்துவர கட்டளை இட்டார். மேலும் அவரை சோதிக்கவும் நினைத்தார். அதன்படி, சகல மரியாதைகளுடன் தாசரை மந்திரி பிரதானிகள் அழைத்து வந்தனர். அவர் வந்ததும் அக்பர் அவரை வரவேற்று சிம்மாசனத்தில் அமரச் செய்து தனக்கு ஸ்ரீ ராம தரிசனம் கிட்ட அருள வேண்டும் என்று வேண்டினார். மேலும் தாசர் அதுவரை இங்கேயே தங்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.

அரசனின் கட்டளைக் கேட்டு தாசர் செய்வதறியாது மாருதியை தியானம் செய்தார். மாருதியும் அவர் முன் தோன்றி விஷயம் அறிந்தார். உடனே தாசரை வேடனை பட வேண்டாம் என அறுதல் கூறி, ஸ்ரீ ராமனின் பெயரை ஜபிக்க 1000 கணக்கில் குரங்குகள் அரண்மனை உள்ளும் வெளியும் நடமாடத் தொடங்கின. அவைகள் எல்லாவற்றையும் நாசம் செய்தன. ராணிகளின் அறைக்குள்ளும் நுழைந்தன, அவர்களையும் துன்புறுத்தின. இதனால் பயந்த ராணிகள், மன்னனிடம் முறையிட செய்வதறியாது திகைத்தான் அரசன். அப்போது அவர் மந்திகளில் ஒருவர், தாசரின் ராம பக்தியால் இவைகள் நிகழ்வதாகவும் தாங்கள் தாசரிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதன்படி அரசன் உடனே துளசிடாசரிடம் சென்று தன்னை மன்னித்தருளுமாறு வேண்ட, தாசரும் மாருதியிடம் விண்ணப்பிக்க உடனே எல்லாக் குரங்குகளும் மறைந்தன. அப்போது தாசர் அக்பரிடம், 'சூரியன் வரும் முன் அதன் கிரணங்கள் பூமியை தொடுவதுப் போலே பல்லாயிர வானரப் படைகள் ராமனுக்கு முன் இங்கு வந்தன. இன்னும் பல்லாயிரம் வானரங்கள் வந்தபின் உனக்கு ராம தரிசனம் கிட்டி இருக்குமே' என்று சொல்ல, அதிர்சியுடன் அக்பர் 'இந்த 1000 கணக்கான வணரன்களே இவ்வளவு அட்டகாசம் செய்து விட்டனவே. இன்னும் பல்லாயிரம் வந்தால் இந்த நகரமே அழிந்து விடுமே' என்று பதட்டத்துடன் 'ராம தரிசனம் போதும் ராம கானத்தின் மகிமையை புரிந்துக் கொண்டேன்.' என்று கூறி தன் அகந்தை அழிந்ததாதாகவும் மேலும் தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். மேலும் ஒரு வருட காலம் தன் அரண்மனையிலேயே தங்க வைத்து ஸ்ரீராம கானம் செய்து மக்களிடையே ராம பக்தியை பரப்புமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே துளசிதாசர் அக்பரின் அன்புக்கட்டளைக்கு இணங்கி சிறிது காலம் அரண்மனையில் இருந்து கொண்டு மக்களிடையே ராம பக்தியை பரப்பினார்.


பின், துளசிதாசர் அங்கிருது புறப்பட்டு மதுரா நகரம் சென்று யமுனா நதியில் நீராடி பின் கோகுலம் பிருந்தாவனம் முதலிய இடங்கள் சென்று வழிப்பாட்டு, ஒரு மாத காலம் அங்கு தங்கி ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்துக் கொண்டு மேலும் மற்ற வைஷ்ணவர்களுடன் உரையாடி ஸ்ரீஹரியின் பெருமைகளை பகிரிந்துக் கொண்டார். அங்கு வசித்து வந்த ப்ரியதாஸ் என்ற பக்தர் நான்கு யுகத்திலும் வாழ்ந்த, மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரி பக்தர்களைப் பற்றி ஓர் புத்தகம் எழுதி உள்ளதை அறிந்து அவரிடம் துளசிதாசர் வந்தார். அவரது மகிமையை கூறி அவரது பக்தி தொண்டின் அடையாளமான அப்புத்தகம் தனக்கு வேண்டும் என்று ப்ரியதாசரிடம் விண்ணப்பித்தார். அவற்றைப் பற்றி கூறிக் கொண்டு வந்த ப்ரியதாசர், தான் இன்னும் சிறந்த பக்தரான துளசிதாசரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை என மனக் குறையுடன் கூறினார். அபோது ஓர் அதிசயம் நடந்தது. ஸ்ரீ ராமர் அவர்கள் முன் தோன்றி ஸ்ரீ துளசிதாசரின் மகிமைகளை தன் கைப்பட எழுதி மறைந்தார். இந்த அதிசயத்தை மற்ற பக்தர்களும் கண்டு ஆனந்தம் அடைந்தனர். பக்த வட்சலனான ஸ்ரீஹரியின் பெருமைகளை மக்கள் நான்கு அறிந்து வழிப்பட்டனர்.

ஜெய் ஸ்ரீ துளசிதாஸ்.



                       
   


ஜெயதேவர்

ஸ்ரீஹரியின் விருப்பப்படி வியாச முனிவர் ஒரு பிராமண குடும்பத்தில் துந்துபில்வா என்னும் ஊரில் ஜெயதேவராக அவதரித்தார். சகல புராண இதிகாசங்களையும் கற்றறிந்த அவர், கடவுளின் புகழ் பாடுவதே இந்த கலியுகத்தில் சிறந்த வழி என தெரிந்து கொண்டார். அவர் காலத்தில், கிருஷ்ண நாம ஜபம் பிரசித்தியாக இருந்தபோதிலும், இவர் கிருஷ்ண லீலைகளை பாடலாக கீதகோவிந்தம் என்ற பெயரில் எழுதினர். இவை பத்மபுரானத்தின் படியான கருத்துக்கள்ளாகும்.

இதில் ராதா-மாதவ பிரேமையையும், கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப்  பற்றியும் பாடியுள்ளார். இதை பல பண்டிதர்களும், மக்களும் விரும்பிப் பாடலாயினர்.

இந்நிலையில் அதே ஜகன்னாத புரியின் அரசரும் ஸ்ரீகிருஷ்ணனை பற்றிய பாடல்களை புத்தகமாக எழுதி, அதையே மக்கள் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தினார். ஆனால், மக்கள் அதை விரும்பாததால் இருவரின் புத்தகங்களையும் ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில்வைத்து  பூட்டி சிறந்ததை ஸ்ரீ கிருஷ்ணரே  தீர்ப்பு  செய்யட்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு அன்று  இரவு  அவ்வாறே  செய்தனர்.

மறுநாள் காலை சந்நிதானம் திறந்து  பார்க்கையில் ஸ்ரீ ஜெயதேவரின் பாடல்கள்  மட்டுமே  அங்கு  இருந்தது. அரசரின்  புத்தகம் வெளியே கிடந்தது  இதனால் தலைகுனிவு கொண்ட அரசன் ஸ்ரீ ஜகன்னதரிடம் பலவிதத்திலும்  மன்னிப்பு கேட்டு, தன்னை ஏற்குமாறு வேண்டினார். அவருக்கு தான் ஓயிருடன் இருப்பதுவே  கேவலமாக நினைத்தார்.  

ஜெயதேவரின் திருமணம் 
ஜகன்னாதபுரியில் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்த ஓர் பிராம்மணனுக்கு பத்மாவதி என்ற ஓர் பெண், அழகும், அறிவும் நிறைந்தவளாக இருந்தாள். அவளை மணக்க பல பேர் முயற்சித்தும் அந்த பிராமணன் தன் மகளை மணக்க தகுந்தவன் ஸ்ரீ கிருஷ்ணனே என்ற முடிவில் திடமாக இருந்தார். பத்மாவதியும், ஸ்ரீ கிருஷ்ண பக்தையாகவே இருந்தாள்.

ஒரு நாள், அந்த பிராமணனின் கனவில், ஸ்ரீ ஜெகநாதர் தோன்றி, தான் அவதாரத்தின் ஓர் அம்சமான ஜெயதேவருக்கு, பத்மாவதியை மணமுடிக்குமாறு  சொல்லி மறைந்தார். விழித்தெழுந்த அந்த பிராமணரும் இதை சாட்சாத் ஸ்ரீ ஜெகநாதரின் கட்டளையாகக் கொண்டு ஜெயதேவர்-பத்மாவதி திருமணத்தை 4 நாட்கள் விமரிசையாக நடத்தி முடித்தார். 

அவ்வூரில், நற்குணங்களும், பக்தியும் பொருந்திய ஒரு வியாபாரியும் இருந்தார். அவர் ஜெயதேவரிடம் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததால், ஜெயதேவர் அவரை தம் சிஷ்யனாக்கி கொண்டார்.  அன்பும் பண்பும் நிறைந்த அந்த வணிகர், தம் குருவிற்கு சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி உடையவராய் இருந்தார். ஒரு நாள்,  தனவானான அந்த வணிகன், ஜெயதேவர் தான் இருப்பிடம் வந்து ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை கானம் செய்து எல்லா மக்களும் கேட்டு இன்புறச்செய்யுமாறு வேண்டினார். ஜெயதேவரும், அவரது வேண்டுகோளை ஏற்று பக்தி இல்லாதவர்கள் கூட இந்த கிருஷ்ண கானத்தில் லயிக்கும்படி செய்தார். இவாறாக பக்தனான் வணிகனின் ஆவலை பூர்த்தி செய்து ஒரு நாள் தம் இருப்பிடம் திரும்ப வணிகனிடம் விடைபெற குரு சேவையில் திளைத்த பக்தனான அவ்வணிகன் பிரியாவிடை கொடுத்தான். மேலும், குரு பொன்னும் பொருளும் விரும்பாதவராகையால், அவருக்கு தெரியாமல் பொன்னையும், பொருளையும் ஓர் வண்டியில் ஏற்றி குருவை அவ்வண்டியில் அமர்த்தி இரு காவலாளிகளை அவரது ஊர்வரை சென்று விட்டு வரச்செய்தான். மேலும், இபொருள்களை குரு பத்தினியிடம் பணிவுடன் ஒப்படைக்கும்படி சொன்னான். அக்காவலாளிகள் இருவரும், அவ்வண்டியுடன் சிறிது தூரம் சென்ற பின் வேறு ஒருவனை குருவிற்கு காவல் செல்லுமாறு கூறிவிட்டு, அவிருவரும் தம் வீடு திரும்பினர். சிறிது நீரம் கழித்து, அந்த வேலை ஆளும் ஜெயதேவரிடம் அனுமதி பெற்று வீடு திரும்பினான். இதனால், ஜெயதேவர் தானே வண்டியை ஒட்டிச்சென்றார். இதை எல்லாம் கவனித்த  இரு திருடர்கள், ஜெயதேவரை வழிமறிக்க, அவர் அவர்களின் விருப்பம் அறிந்து வண்டியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடந்தார். சந்தேகந்துடன் ஜெயதேவரை பார்த்த திருடர்களுக்கு திடீர் என ஒரு யோசனை தோன்றியது. அதனால், மறுபடி திரும்பி வந்து, ஜெயதேவரை கொள்ள நினைத்தனர். எதோ எண்ணம் மனதில் தோன்ற, அவர்கள் ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு குழியில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்.

ஸ்ரீஹரி ஸ்மரனத்தில் இருந்த ஜெயதேவர் சிறிது நேரத்தில் நினைவிழந்தார். அபொழுது, அவழியே வேட்டையாட வந்தே கிரௌஞ்ச மன்னன், அம்மஹானைக் கண்டு தன் அரண்மனைக்கு எடுத்துசெல்ல உத்தரவிட்டான். அங்கு, அவருக்கு வேண்டிய வசதிகளையும், உபசாரங்களையும் செய்து கொடுத்தான். ஜெயதேவர் அவர்களின் சங்கீர்த்தனத்தில் மனம் ஒன்றிய அரசன், தானும் ஹரிபக்தனாக மாறினான். ஜெயதேவரின் உபதேசப்படி வரும் சன்னியாசிகளை  உபசரித்து அவர்கள் ஆசி பெற்று வாழ்ந்து வந்தான்.

ரௌஞ்ச மன்னன், சனியாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த அந்த திருடர்கள் தாங்களும் சன்யாசி வேஷம் தரித்து அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெயதேவரைக் கண்டதும் மனதில் பீதி உண்டாயிற்று. இருப்பினும், ஜெயதேவர் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களை ஆரத்தழுவி, அவர்கள்ளுக்கு வேண்டிய உபசரனைகள் செய்து, அவர்கள் போகும் வரை நான்கு கவனித்து, வேண்டிய பொருட்களை கொடுத்து அனுப்புமாறு சொன்னார். மன்னனும் அவ்வாறே செய்து மேலும் இரு காவலாளிகளை துணையாக அனுப்பிவைத்தான்.

பாதிவழி செல்கையில், காவலாளிகள்ளுக்கு சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசிகளை நோக்கி, "ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு கருணை காட்டினர்.?" எனக் கேட்டனர். அதற்கு அந்த போலி சன்யாசிகள், "ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்தபோது நல்லெண்ணம் இல்லாத அந்த அரசன், ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரை காட்டிற்கு கூடிச்சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டார். ஆனால், நாங்கள் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம்", என்று பொய் உரைத்தனர். அப்போது, எதிர்பாராத விதத்தில் பூமி பிளந்து அவ்விருவரும் அக்குழியில் விழுந்து மடிந்தனர். இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை  சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித்தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார். 

துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர்களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம்தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக்கணமே ஜெயதேவர் தாம்  இழந்த கைகளும் கால்களும் திரும்ப வரப்பெற்றார். இதனைக்  கண்ட அரசன், ஜெயதேவரின் துணைவியாரை பல்லக்கில் அழைத்து வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவ்வாறே ஜெயதேவரின் துணைவியார், பத்மாவதி அம்மையார் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். தம் கணவரின் புதிய நிலையினைக் கண்ட அவ்வம்மையார், ஆனந்த கண்ணீர் வடித்து, இறைவனை உளமார பிராத்தித்தார்.
  
அரசன் பத்மாவதி தேவியாரை உபசரித்து, கவனித்துக் கொள்ளுமாறு தம் அரசிகளுக்கு அறிவித்தார். அவர்களும் அவ்வாறே பத்மாவதி தேவியாருடன் அன்புடனும், மரியாதையுடனும் பழகி, ஸ்ரீகிருஷ்ண லீலைகளை கேட்டு மகிழ்ந்தனர். 


ஒரு நாள் அரசியாரின் சகோதரனின் மரணச் செய்தியும் அவருடன், அவர் மனைவி உடன் கட்டை எரியதாயும் செய்தி வந்தது. வேதனை அடைந்த அரசியாருக்கு, பத்மாவதி தேவியின் மௌனம் அதிசயமாக இருந்தது. அரசியாரின் சகோதரரின் மனைவி உடன்கட்டை ஏறியது, ஏழு பிறவியிலும், அவர்கள் தம்பதியாக இருப்பார்கள் என்று கருத்தல்லவா? என பத்மாவதியிடம் கேட்டார். அதற்கு, பத்மாவதி தேவி, கணவன் இறந்ததை கேட்ட உடனே மனைவி தற்கொலை செய்துகொள்ளலாமே தவிர, உரிருடன், நெருப்பில் விழுவதில், தனக்கு உடன்பாடில்லை என கூறினார். சூரியன் மறைத்தும், சூரிய கிரணங்கள் தானே மறைவது போலே மறைய வேண்டும் என்று கூறினார்.    

அரசியாருக்கு, தேவியாரின் கூற்று பொய்மையாக மனதில் பட, சோதிக்க நினைத்தார். அன்று, அரசர் ஜெயதேவருடன் வேட்டையாட கானகம் சென்றார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, தன் மந்திரியுடன், ஜெயதேவர் காட்டில் புலி அடித்து இருதுவிட்டார், என்ற பொய் செய்தியை ஊரெங்கும் அறிவிக்கச் செய்தார். இச்செய்தி பத்மாவதி தேவியாரின் செவியில் விழ, உடனே அவர் மரணம் அடைந்தார். அதைக்கண்ட அரசியார் அதிர்ச்சி அடைந்தார்.

அரசன், அரண்மனை வந்ததும், இச்செய்தியால், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து, பத்மவதியர் இருக்கும் இடம் சேர்ந்தார். மந்திரியார் மூலம், இந்த பொய்யான நாடகத்தை அறிந்த அரசன், அரசியாரை கொல்ல நினைத்தார். ஆனால், பெண்ணை கொள்வது பாவமாதலால், தன்னையே நெருப்பில் அஹுதி ஆக்க முற்பட்டார். நகரத்தின் வெளியே நெருப்பு மூட்ட கட்டளையிட்டு, ஜெயதேவரிடம் வந்து தன்னால் ஒருக் இழிவு ஏற்பட்டதாக கூறி தன் மனநிலையையும் கூறினார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் அறிந்த ஜெயதேவர் அரசனை சமாதானப்படுத்தி, பத்மாவதி தேவியாரின் உடல் முன் வந்து ராதா-மாதவ கானம் பாடி, "மஆதவா கோவிந்தா பக்த ரத்ஷகா, கஜேந்டிரன்னுக்கு, த்ரௌபதிக்கும் உடனே அருள் புரிந்தவா, இப்போது, எனக்கு அருள் புரிவையாகே' என பலவாறு துதி செய்து தன்னை மறந்து 24 சுலோகங்களாக 8 வரி கொண்ட ஸ்லோகங்களை பாடப்பாட ஸ்ரீ ஜெகநாதன், தன் பக்தன்னுக்காக இறங்கி வந்து ஜெயதேவரை அணைத்து, ஆசீர்வதித்து பத்மவதிதேவியாரை உயிர்ப்பித்தார். மேலும் ஒரு வரமாக, "இந்த உன்னுடைய பாடல்களை பாடுபவராயும், கேட்பவரையும் இருபோர்க்கு எப்போதும் நான் அவர்கள் அருகில் இருப்பேன்.", ஏனக்கூறி மறைதார்.

அரசனின் பண்பும் பக்தியும், ஜெயதேவரின் அருளால் இருமுறை தெய்வ தரிசனம் அடயச் செய்தது அல்லவா!!!

வியாசரின் அவதாரமான ஜெயதேவரின் இந்த 24 கானங்கலான [ராசா லீலைகள்] கீத கோவிந்தந்தை பாடுவோரின் எல்லாவிதமான இன்னல்களும் ஸ்ரீஹரியின் அருளால் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஹரிபக்தர் ஆவர்கள் என்பது நிதர்சனம். 


ஜெய் ஜெயதேவ மகாராஜ் 
ஜெய்   ஸ்ரீஹரி