பக்தவிஜயம்

ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீஹரி பக்தர்களின் வரலாற்று களஞ்சியம் இந்த பக்தவிஜயம் என்ற நூல். இது குரு வசிஷ்டரின் வம்சாவழியில் வந்த மஹிபதி என்பவரால் பல மகான்களால் எழுதப்பட்ட நூல்களிலிருந்து திரட்டி எடுக்கப்பட்டது.  அவரது கதைகளை நான், என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன்.

ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் முடிந்து கலியுகம் பிறந்ததும், பல விதங்களிலும் தர்மம் நிலை குலைந்து பொய்மையே வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்தனர். வேத அனுஷ்டானங்கள், சம்பிரதாயங்கள், எல்லாம் சீர் கெட்டு, பக்தி என்பதையே மக்கள் மறந்து வாழ்ந்தனர். இந்தனை கண்ட ஸ்ரீ ஹரி, தம் பக்தர்களையும், மக்களையும் காக்கும் பொருட்டு, தனது பக்தர்களை பல இடங்களில் பிறக்க செய்து, தாமும் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். எவ்வாறு தன் முந்தைய அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில், அருஜுனனுக்கு, கீதையை உபதேசிக்கும் பொழுது, "தர்மம் நிலை குலையும் பொழுதெலாம் நான் அவதரிப்பேன்" என்று கூறினாரோ அதே போல், கலியுகத்திலும் தான் புத்தராக அவதரிக்க போவதாக அறிவித்தார். தம் பக்தர்களையும் ஒவ்வோரிடத்திலும் பிறக்கும்படி கட்டளை இட்டார்.

அதன்படி பண்டரிபுரத்தில் உத்தவரையும் மதுராவில் அக்ரூரரையும், தாரூக் என்னும் பக்தரை ராமதாசராகவும் அவதரிக்க செய்தார். கிழக்கு ஜகந்நாதபுரியில் வியாசரையும், ஹஸ்தினபுரத்தில் வால்மீகியையும் அவதாரம் எடுக்க செய்து ஸ்ரீ கிருஷ்ண பக்தி வளர வழி செய்தார். 

ராமவதாரத்தில், வாரங்களாகவும், கிருஷ்ணாவதரத்தில் கோபாலர்களாகவும் அவதரித்த பக்தர்களை இந்த கலியுகத்தில் புத்த அவதாரத்தில் மேற் கூறியபடி, இந்தியாவின் நான்கு திசைகளிலும் மறுபடியும் பிறந்து மக்களிடையே பக்தியை வளர்க்குமாறு கட்டளை இட்டார்.  

ஸ்ரீஹரியின் கட்டளையால் மனம் மகிழ்ந்த பக்தர்கள் மனிதகுல நன்மைக்காக  உலகில் அவதரித்தனர். உத்தவர் நாமதேவராக பண்டரிபுரத்தில் தையல் வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறாக, சுகப்ரம்மம் முகமதிய இல்லத்தில் கபீராகவும், வால்மீகி, பிராமண இல்லத்தில் துளசிதாசராகவும், தாருகர், தாகூர் என்னும் இடத்தில் இராமதாசராகவும்   பிறந்தனர்.       


பின் சிவபெருமானை [ருத்ரன்] நோக்கி ஸ்ரீஹரி தங்கள் 'நரசிமேதாவாக ஜுனகாத் மக்களின் அறியாமையை விலக்கி பக்தியை வளர செய்யுமாறு வேண்டினார்.

ஸ்ரீஹரி தான் த்யாநேஸ்வரராக பிறந்து, பகவத்கீதையின் மகிமைகளை ஜுனகாத் மக்களுக்கு போதிக்க அவதரிபதாக கூறினார். அதேபோல் பிரமதேவர், சோபன் என்ற பக்தராகவும், சதாசிவன், நிவ்ருதி என்ற பெயருடனும், ஆதி மாயா முக்தாபாய் என்ற பெயருடனும் பிறந்தனர். இவ்வாறாக கலியுகத்தில், தர்மத்தையும், பக்தியையும் நிலைநாட்ட நம் தேசத்தில் அவதரித்தனர். 

இனி அவர்களின் மகிமைகளை பார்ப்போம்.      

பக்த கபீர்

ஸ்ரீஹரியின் விருப்பப்படி, பாகிரதி நதியின் நீரோட்டத்தில் மிதந்து வந்த சிப்பியானது மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில், கங்கையில் ஒரு முகமதியரின் கையில் கிடைத்தது. அந்த முகமதியர் ஓர் நெசவாளி. கங்கையில் அந்த மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில் தன் நேசவுக்கான நூல் கட்டுகளை அலசிக் கொண்டிருக்கையில் இந்த சிப்பி மிதந்து வருவதையும் அதனுள் இருந்து ஏதோ சப்தம் வருவதையும் அறிந்து அடுத்துப் பார்த்தார். அதனுள், ஓர் ஆழகான குழந்தை ராம நாமம் ஜபித்தபடி இருந்ததைக் கண்டார். ஆனந்தம் அடைந்த அவர், அக்குழந்தையை ஓர் துணியில் சுற்றி வீட்டிற்க்கு கொண்டு சென்றார். அதைக் கண்ட அவரது மனைவி குழந்தையை வாங்கி அன்புடன் மார்போடு அனைத்துக்க் கொண்டார். இறைவன் அருளால் அவள்ளுக்கு, அக்குழந்தைக்கு பாலூட்டும் பாக்கியம் கிட்டியது.  இச்செய்தி ஊரில் உள்ளோர்க்கெல்லாம் தெரிய வர அவர்கள் எல்லோரும் குழந்தையின் அழகையும், அதன் வாயில் இருந்து வரும் ராம் ராம் என்ற சப்தத்தையும் கேட்டு வெகுவாக வியந்தனர். மேலும் சிலர், ஓர் முகமதீனுக்கு எவாறு இக்குழந்தை கிடைத்தது? இது விஷ்ணுபக்தயுள்ள குழந்தையாக உள்ளதே என ஆச்சர்யப்பட்டனர். இன்னும் சிலர், இந்த கமால் பூர்வ ஜன்மத்தில் நிறைய புனியம் செய்தவனாக இருப்பான். அதன் காரணமாகவே இக்குழந்தை அவனுக்கு கிடைத்துள்ளது என பலவாறு பேசிக்கொண்டு சென்றனர். கமால் தம்பதியினர், அக் குழந்தைக்கு 'கபீர்' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

கபீர் நன்றாக வளரிந்து திருமண வயதை அடைந்தான். அவனுக்கு மனம் செய்வித்து தனுடைய நெசவுத் தொழிலையும் செய்யவைத்தார். ஆனால் கபீர் இறைவனின் நினைவைத் தவிர எந்தவித பற்றுதலும் இல்லாமல் இருந்தான். உயர்ந்தது தாழ்ந்தது என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லாம் இறைவன் சொத்துக்கள் என சம பதியுடன் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் தன் ஆடை நெய்வதற்காக  உட்கார்ந்த கபீர் சிறிது நேரத்திலேயே  ராம ஸ்மரனத்தில் முழ்கி விட்டார். அங்கு வந்த அவரது தாயார் கபீரின் நிலைக் கண்டு, அவரை உளுக்கி எழுப்பினார். மறுபடி தன்னிலை வந்த கபீர் துணி நெய்ய ஆரம்பித்தார். ஆனால் அவரால் சிறிது நேரமே அந்தப் பணியில் இருக்க முடிந்தது. மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னிலை மறந்தார். இதனைக் கண்ட ஸ்ரீ ராமன் பக்தவத்சலன் கபீரின் வேலையே தானே செய்ய கபீரின் இல்லம் வந்தார். கபீரின் வேலையை செய்யவும் ஆரம்பித்தார். கபீருக்கு சுய நினைவு வரும் பொழுது ஸ்ரீ ராமன் மறைந்து விடுவார். இவ்வாறே ஒரு வழியாக அந்தத் துணி நெய்து முடிக்கப்பட்டது. அதைக் கபீர் தாயிடம் கொடுக்க தாயின் ஆணைப்படி கடையில் விற்று பணம் வாங்கி வர சென்றார். ஆனால், பஜாரில் மற்ற வியாபாரிகளுடன் உட்கார்ந்த கபீர் மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னை மறந்தார்.

அந்தப் பட்டுத்  துணியைப் பார்த்தவர்கள், தங்களுக்கு அதை வாங்கும் வசதி இல்லததுபோல நினைத்து ஒருவரும் கபிரிடம் வந்து விலைக் கேட்க வில்லை. காரணம் இறைவனும் கபீரும் சேர்து நெய்த அந்த துணி அவர்களின் கண்களுக்கு மிக உயர்த பொருளாக தோன்றியது. அதனால், மாலை வரை யாரும் விலை கேட்டு முன் வரவில்லை. அந்தி நேரம் எல்லா வியாபாரிகளும் சந்தையை விட்டு போய்விட்டனர். கண்விழித்து பார்த்த கபீர் தன் பொருள் விற்கவில்லையே என நினைத்த அவருக்கு தாயின் நினைவு வந்தது. தாயார் கோபித்துக் கொள்வாரே என மிக வேதனை அடைந்தார்.

இரவு நெருங்கும் வேலையில் எதிரே ஓர் காலியான வீடு ஒன்றை கபீர் கண்டார். உடனே தன் வீட்டிற்கு போகும் என்னத்தை விட்டு அந்த காலியான வீட்டிற்கு நுழைந்தார். மறுபடி ராம ஸ்மரனையில் ஈடுபட்டார். கபீரின் நிலைமையைக் கண்ட இறைவன் அவரை சோதிக்க எண்ணி ஓர் வயதான பிராமணனாக தன்னை மாற்றிக் கொண்டு கபீர் இருந்த விட்டிற்குள் நுழைந்து தான் குளிரால் மிகவும் நடுங்குவதால் தனக்கு ஏதேனும் போர்த்திக் கொள்ள துணி கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அந்த வயதானவரின் நிலைக் கண்ட கபீர் தான் நெய்து கொண்டு வந்த துணியை பாதியாகக் கிழித்து வந்தவருக்கு கொடுத்தார். வந்த வரும் நன்றியுடன் வங்கிக் கொண்டு சென்றார். கபீரின் தயாள குணத்தை மேலும் உலகுக்கு உணர்த்த இறைவன் மறுபடி ஓர் பகிரியின் [பிச்சைக்காரன்] உருவை எடுத்து வந்து கபீரின் வீட்டு வாசலில் சிவந்த கண்களுடனும் கையில் ஓர் மனிமாலையுடனும், காலில் ஓர் ஆபரணமும் அணிந்து கொண்டு உள்ளே நோக்கி, ''உன்னிடமுள்ள உடையைக் கொடு. உருவமும் குணமும் இல்லாத ராமனை ஏன் துதித்துக் கொண்டுள்ளாய்" என கோபத்துடன் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே கேட்டான்.    அதைக் கேட்ட கபீர்,  ''உருவமில்லாத கடவுள் பக்தனுக்காக உருவத்துடன் தரிசனம் தருவான். அவன் குனதீதன், எல்லா குனங்கல்லுக்கும் அப்பாற்பட்டவன்'' என கூறினார். இதை எல்லாம் கேட்க விரும்ன்பாத பகீர் சீக்கிரம் அந்த துணியை தருமாறு நிர்பந்திக்க, கபீரும் அதனை அவருக்கு அளித்து விட்டு நிமதியாக மறுபடியும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்தார்.

கபீரின் மகிமையை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன் மறுபடி சோதிக்க எண்ணினான். உடனே ஓர் பிராமண உருவம் கொண்டு கபீரின் தாயிடம் சென்றார். அவரிடம், கபீர் சந்தையில் துணியை யார் கேடும் விலைக்கு விற்காமல் யாருக்கோ தனம் செய்து விட்டு அங்குள்ள ஓர் வீட்டிற்க்குள் உட்கார்ந்திருப்பதாக புகார் சொல்ல, கபீரின் தாய்க்கு முகுந்த கோபம் உண்டாயிற்று. கபீர் வீடிற்கு வந்ததும் சரியான தண்டனை தருவதாக கூறினார். ஆனால், அந்த பிராமணர், அவளை விடுவதாக இல்லை. மேலும், அவர், கபீர் அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வரமாட்டார், ஆகையால் தன்னுடன் வந்தால், அவர் இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறினார். ஆத்திரத்தில் உள்ள கபீரின் தாய் உடனே அவருடன் புறப்பட்டாள். கபீர் தங்கி உள்ள இடத்தை பிராமணர் சற்று தூரத்தில் இருந்து காண்பித்தார். கோபத்துடன் வீட்டினுள் நுழைந்த கபீரின் தாயார், கபீரை பார்த்து, ''எங்கே அந்த சால்வை?, கொடு என்னிடம்" என பலமுறை கேட்டும் உலகையே மறந்திருந்த கபீருக்கு இந்தக் குரல் கேட்கவே இல்லை. இதனால்  கோபமுற்ற தாய் செய்வதறியாது நிற்கையில் பிராமண ரூபத்தில் உள்ள ஸ்ரீ ஹரி ஓர் கம்பை கொடுத்து கபீரை அடிக்கச் செய்தார். கபீரின் மேல் விழுந்த ஒவ்வோர் அடியும் வெளியில் நின்றிருந்த அந்த பிராமணருக்கு வலி ஏற்படுத்தியது. கபீர் இந்த அடிகளுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதவராகவே மெய் மறந்திருந்தார். அந்தத் தாயின் அடிகளால் வலி பொறுக்காத இறைவன் அந்த பிராமண ரூபத்தை விடுத்து சீத சமேத ஸ்ரீ ராமனாக கபீரின் முன் தோன்றினார். அப்போதுதான் கண் விழித்த கபீர் சர்வலங்கார பூஷிதனாக வில்லேந்திய ராமனை சீதாதேவியுடன் கண்டு மகிழ்ந்து அவரது சரனத்தில் வீழ்ந்து வணகினார். ஸ்ரீ ராமனின் தோற்றத்தை கண்ட கபீரின் தாயும் உடல் நடுங்க அஞ்சலி செய்த வண்ணம் நின்றார்.  மேலும், ''தாயே நீ மிகவும் அதிர்ஷ்டம் ஆனவள்'' என ஆசிர்வதித்தார். அந்த தாயும் மகனை நினைத்து பெருமைப் பட்டு கபிரால் தனக்கு தெய்வ தரிசனம் கிட்டியதை நினைத்து கபிருடன் வீடு செல்ல புறப்பட்டாள். ஸ்ரீ ஹரியும் தன் பக்தனை ஆசிர்வதித்து மறைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கபீரின் தாயாரும் கடவுளின் த்யானத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். கபீரின் மனைவி கணவனுக்கு ஏற்றவளாகவே இருந்ததால் அவர்கள் இருவரும் எந்த ஒருக் கஷ்ட நஷ்டங்களையும் ஓர் பொருட்டாக எண்ணாமல் வாழ்கையை நடத்தி வந்தனர். இறைவன் அருளால் அவர்கள்ளுக்கு ஓர் மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு கமால் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். கமாலும் எல்லா நற்குணங்களும் பொருந்தியவனாக இருந்தான். கமால் தனக்கு 7 வயதாக இருக்கையில் தான் த்வாரகை செல்ல விரும்புவதாக கூறினான். சிறு வயதிலேயே அவனது அவனது இறை ஈடுபாட்டைக் கண்ட கபீர் உடனே அவனுக்கு அனுமதி கொடுத்தார். தாய் தந்தையாரின் அனுமதியுடன் கமால் தனது தவறாக பயணத்தை தொடர்ந்தான். வழியெல்லாம் ராம கானம் பாடியபடி துவாரகையை அடைந்தான். இடையில் கோமதி நதியில் நீராடி தன் முந்தைய பாவங்கள் தொலையவும், பிறப்பில்லாது தன்னை காக்குமாறு வேண்டி, அந்த நதியில் பல சடங்குகள் செய்து துவாரகையை அடைந்து இறைவன் சந்தியின் முன் நின்று வணங்கினான். நான்கு மாதங்கள் துவாரகையில் தங்கி, ஹரி கீர்தனன்களால் அங்குள்ள மக்களையும் மகிழ்வித்தான்.

மூன்று வேலையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்யாமல் கமால் இருந்ததில்லை. முடிவில், ஸ்ரீ கிருஷ்ணனிடம் தன் மறுபடி இங்கு வந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிராத்தித்து தன் பயணத்தை தொடர்ந்தான். வழியில் சித்திரகூடம் என்னும் ஓர் இடத்தில் ஒரு ஹரி பக்தனான வியாபாரி இவனை தன் இருப்பிடம் அழைத்துச் சென்று உபசரித்தான். மறுநாள், அவ்வூர் மக்கள் மத்தியில் ஹரி கீர்த்தனம் செய்து பின் மண நிறைவுடன் புறப்பட தயார் ஆனான். அப்போது அந்த வியாபாரி தன் அன்பின் பரிசாக கமாளுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என எண்ணினான். ஆனால், பணம் கொடுத்தால் கமால் ஏற்றுக் கொள்ளமாட்டான் என தெரிந்து ஓர் விலை மதிக்க முடியாத ஒளி மிகுந்த மாணிக்கக் கல் ஒன்றை அவனது காலடியில் சமர்ப்பித்து ஏற்ற்றுக் கொல்ல வேண்டினான். ஆனால் கமால் அதற்கு பல சமாதானங்கள் சொல்லி மறுத்து விட அந்த வியாபாரி கமாளுக்கு தெரியாது அவனது ஆடையில் முடிந்து வைத்து விட்டார்.

காசியில் தன் வீட்டிற்கு வந்த பிறகு இந்த மாணிக்கக் கல் தன்னிடம் உள்ளதை கமால் அறிந்து, நடந்ததை தன் தந்தையிடம் கூறி அதை அவரது காலடியில் வைத்தான். அதைக் கண்டதும் மிக்க வேதனை அடைந்த கபீர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவரது மனைவி அவரை சமாதானப் படுத்தி காரணம் கேட்டார். தன் மகன் ஏதோ ஒரு மறைமுக ஆசையால் தான் இந்த மாணிக்கத்தை கொண்டு வந்துள்ளான். ராம நாமைத்தை இந்த மாணிக்கக் கல்லுக்கு விற்றுள்ளான் என மிகவும் வேடனை அடைந்தார் கபீர். இதக் கேட்ட கமால், அந்த மாணிக்கக் கல்லை எடுத்துக் கொண்டு மறுபடி அந்த வணிகனைக் கண்டு அவனிடமே ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினான். இதைக் கண்ட பின்தான் தன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

ஒரு நாள் மாலை நேரம் யாத்ரிகர்களாக சில சாதுக்களும் சன்யாசிகளும் கபீரின் இல்லத்துக்கு வந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற கபீர் அவர்களை தன் வீட்டிலேயே அன்றிரவு தங்குமாறு வேண்டினார். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யுமாறு மனிவியிடம் கோரினார். அனால் வீட்டில் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் எதுவும் இல்லை. இதை அறிந்த கபீர் தன் மகனை, தன்னுடன் வரும்படி அழைத்துக் கொண்டு ஓர் கடைக்கு வந்தார். அங்கு வியாபாரி தூங்கிக் கொண்டிருந்தார். கடை அடைக்கப் பட்டிருந்தது. இதைக் கண்ட கபீர் வீட்டுக்கு சென்று கடையை வுடைத்து சாமான்களை கொண்டு வர தகுந்த ஆயுதங்களுடன் கடைக்கு வந்தார். கடையை உடைத்து இருவரும் உள்ளே சென்று சமையலுக்கு வேண்டிய சாமான்களுடன் ஒரு மூட்டைக கட்டிக் கொண்டு வெளியே வந்தார். அந்தக் கடையில் பணமும், துணி மணிகளும், இன்னும் மற்ற பொருள்களும் இருந்தன. ஆனால், அவர் அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் அன்றைக்கு சாதுகளுக்கு சமைத்து அன்னமிட தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டனர். கபீர் மூட்டயுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால், சிறுவனான கமாலின் மனம் தம் கடைக்காரரிடம் சொல்லாமல் போவது தவறு என தோன்றியதால், கடைக் காரரை எழுப்பி, "உன் கடையில் இரண்டு திருடர்கள் நுழைந்து சாமான்களை திருடிச் செல்கின்றனர்." என சொல்லி விட்டு தந்தையை பின் தொடர்ந்தான். விஷயம் அறிந்த கடைக் காரர், காமாலை விரட்ட, கமால் ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்து ஓட முயற்சித்தான். அப்போது இரு கல் தூண்கலுக் கிடையில் அகப் பட்டுக் கொண்ட அவன் உடல் ஓட முடியாமல் மாடிக் கொண்டது.
 

நாமதேவர்

ஒரு நாள் பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரையும் சுகரையும் அழைத்து பூமியில் அவதரிக்குமாறு கூறினார். இதைக் கேள்வியுற்ற இருவரும் தங்கள் கர்பவாசம் இல்லாமல் சுயம்புவாக பிறக்க அனுகிரகிக்குமாறு வேண்டினர். ஸ்ரீ ஹரியும் இரண்டு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே இருவரையும் சிறு குழந்தைகளாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் விட ஒன்று பாகிரதி நதியிலும், மற்றொன்று பீமாரதி நதியிலும் விழும்படி செய்தார்.

பாகிரதி நதியில் விழுந்த சிப்பிக்குள் இருந்த குழந்தை ராம் ராம் என ஜபித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்து சென்றது.   பீமாரதி நதியில் விழுந்த சிற்பி விட்டால் விட்டால் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. சுகர் ராம நாமத்தையும், உத்தவர் பாண்டுரங்க நாமத்தையும் உச்சரித்தனர்.

தாமாஜி என்ற விஷ்ணு பக்தர் அவ்வூரில் வசித்து வந்தார். அவர் ஒரு தையற்காரர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை, வயதும் ஆகி விட்டது. இருந்தாலும், அவரது மனைவி கோனாய், அவரை பண்டுரங்கனிடம் தமக்கு ஓர் குழந்தை வரம் கேட்கும்படி கூறினாள். அதைக் கேட்ட தாமாஜி, மனைவியின் அறியாமையையும், இந்த வயதில் இது வீன் ஆசை என்று கூரினர். இவ்வாறு மனைவியிடம் கூறிவிட்டு கோவிலுக்குச் சென்று மனைவியின் ஆசையை அவளுக்காக இறைவனிடம் பிராத்தித்துக் கொண்டு வந்து உறங்கினார். அப்போது, அவரது கனவில் இறைவன் தோன்றி, மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார். திடுக்கிட்டு எழுந்த தாமாஜி, இதைத் தன் மனைவிக்குக் கூறினார். 

மறுநாள் காலை பீமா நதிக்குச் சென்று நீராடி தன் நித்யக் கர்மாக்களை முடித்த தமாஜியின் கண்களில் ஓர் பேழைப் போன்று சிப்பி ஒன்று மிதந்து வருவதைக் கண்டார். வியப்பும், மகிழ்ச்சியும் கொண்ட தாமாஜி கடவுளின் அருளை நினைத்து பலவாறு துதித்து அப்பேழையை எதுதுத் திறக்க அதனுள் அப்பொழுதுதான் பிறந்தது போன்ற ஓர் ஆண் குழந்தை இருந்தது. உடனே குழந்தையை எடுத்து தன் மேல் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு விருது வீடு சென்றார். குழந்தையைக் கண்டதும் அவர் மனைவி பெருமக்ழிச்சி அடைந்து வாரி அணைத்துக் கொண்டார். உடனே அந்த வயதிலும் அவள் பால் ஊட்ட கடவுள் அனுக்ரஹித்தார். ஆசையோடும், அன்போடும் அனைத்துப் பால் ஊட்டி மகிழ்ந்தல் அவ்வன்னை. கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

ஒரு நாள். தாமாஜி தான் சந்தைக்கு போக வேண்டி இருப்பதால், வளர்ந்திருந்த நாமாவிடம், இறைவனுக்கு நெய்வேத்யம் குடுத்து அனுப்பும் படி மனைவியிடம் கூறினார். கொனாயும், மகனை அழைத்து பூஜை செய்யும் முறைகளைக் கூறி நெய்வேத்யம் படைத்து வீடு திரும்புமாறுக் கூறி, பூஜை சாமான்களுடன் அவனை பண்டரிநாதன் கோவிலுக்கு அனுப்பி வைத்தாள். நாமாவும், தாய் சொன்னதைப் போல இறைவன்னுக்கு நீரட்டி, மஞ்சள் ஆடை உடுத்தி சந்தன குங்குமம் பூசி, தூப தீபங்கள் காட்டி நெய்வேத்யமாக அம்மா கொடுத்ததை பண்டுரன்கனின் முன் வைத்து, 'பாண்டுரங்க, அப்பா சந்தைக்குப் பொய் உள்ளார் ஆகவே நான் வந்துள்ளேன். இந்த சாப்பாடை சீக்கிரம் சாப்பிடு' எனச் சொல்லி உட்கார்ந்துக் கொண்டான். இவன் வந்து சாப்பிடவில்லை. வேதனையும், அழுகையும் மேலிட நாம மறுபடி, மறுபடி வேண்டினான். 'அம்மா கோபிப்பாள்' எனச் சொல்லி அழுதான். அவனது அறியாமையும், அன்பையும் கண்ட இறைவன் உடனே வந்து அவனதுப் படையலை ஏற்றுக் கொண்டு அவனையும் அனைத்துக் கொண்டு விட்டு மறுபடி மறைந்தார்.

 வீட்டுக்கு வந்ததும் தாய் பிரசாதமாக நைவேத்யத்தை எதிர்ப்பார்த்தவள் பிள்ளை வெறும் தட்டுடன் வருவதைப் பார்த்து யாருக்கு உணவைக் கொடுத்தாய் என வினவினாள். குழந்தையும் நடந்ததைக் கூறினான். இதை அறிந்த தந்தை இதை நம்பாமல், மறுநாள், 'வா என்னுடன்' என மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனார். வழக்கப்படி பூஜைகள் செய்து விட்டு இன்றும் கடவுளை சாப்பிட அழைத்தான் நாமா. ஆனால் இறைவன், 'நாமா நீ தந்தையுடன் வந்துளாய், ஆகையால் நான் நேரடியாக வரமாட்டேன்.' என கூறினார். ஆனால் குழந்தை அடம் பிடித்து, 'இன்று நீ வந்து சாப்பிடாவிட்டால், என தந்தை எனை அடிப்பார்.' என சொல்லி அழ ஆரம்பித்தான். குழந்தையின் அழுகையால் இறைவன் அவனது அன்பிற்கு இணங்கி சிரித்தபடி வந்து உணவை அருந்தி தாமாஜிக்கும் தரிசனம் தந்து மறைந்தார். வியப்பும் ஆனந்தமும் பொங்க தாமாஜி, தம் மகனை அனைத்துக் கொண்டு, 'நீ என வீட்டில் பிறந்ததால் நான் பெரும் பாக்கியம் அடைந்தேன்.' என சந்தோசித்தார். வீடு சென்று மனைவியிடமும் நாமாவின் பக்தியால், தனக்கும் கடவுள் தரிசனம் கிட்டியதைக் கூறினார். இவன் ஹரியின் பெரும் பக்தன் என இருவரும் மகிழ்ந்தனர். 

நாமா வளர்ந்து பெரியவனானான். அவனது பெற்றோர்கள், அவனுக் கேற்ற நல்ல பண்புடன் கூடிய 'ராஜாயி' என்ற பெண்ணை அவனுக்கு மணமுடித்தனர். அவர்கட்க்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நாராயணா என்று பெயரிட்டனர். நாம எப்போதும் இறை சிந்தனயிலேயே இருந்தார். 

ஒரு நாள், நாமாவின் தாய், தன் பிள்ளையிடம், ''அப்பா, எங்களுக்கு வயதாகி விட்டது, நீ உன் குடும்பத்தை கவனிக்காது, என்நேரமும் விட்டால் பக்தியில் முழுகி இருந்தால் குடும்பத்தை கவனிக்க வேண்டாமா?'', என்று வேதனையுடன் கூறினாள்.


தாயின் வார்த்தைகளால், வேடனை அடைந்த நாமா, கோவில்லுக்குச் சென்று "பண்டரிநாதனிடம் விருப்பமில்லாது எனக்கு குடும்பக் வாழ்வை அழித்து இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பையும் கொடுத்தாயே ஹே பண்டரி நாதா, நான் உன்னைத் தவிர யாதொன்றும் அறியேனே", என்று பலவாறு வேதனையுடன் பிராத்திக்க, பண்டரி நாதன் சிரித்தவுடன், "நாமா, nii என கவலைப் படுகிறாய், நீ வேறு நான் வேறு அல்லவே" எனக் கூறி சமாதானப் படுத்தினார். ஆனால், நாமா, "ஈஸ்வரா, நீயும் நானும் எப்படி ஒன்றாக முடியும். நீ பாற்கடலில், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன், சர்வ அலங்காரபூஷிதனாய், தங்கத் தட்டில் சாப்பிடுகிறாய். என் வீட்டிலோ, உடுக்க உடையும் சரியாக இல்லை, உன்ன உணவும் இல்லை. இப்படி இருக்கையில், என வேதனை உனக்கு புரியவில்லையா" எனக் கூறினான். மாயக் கண்ணனான பண்டரிநாதன் புன்னகையுடன் மறைந்தான். 


வீட்டில், நாமாவின் மனைவி, தன் மாமியுடன் தனது கஷ்டத்தை கூறி வேதனைப்பட்டாள். இந்த வீட்டில் தனக்கு எந்த சுகமும் கிட்டவில்லை என ஆதங்கத்துடன் கூறினாள். பண்டரிநாதன் ராஜாயியின் வேதனையைப் புரிந்துக் கொண்டு ஒரு வியாபாரிப் போல வேடமிட்டு, ஒரு எருதின் மேல் கை நிறைய தங்கக் காசுகளுடன், நாமா கோவிலில் இருகயிலேயே நாமாவின் வீட்டைத் தேடி வந்தார். அவ்வீதியில் உள்ளவர்கள், துளசி செடி நிறைந்துள்ள ஓர் குடிலில் ஸ்ரீ பண்டரி நாதனுக்கு துளசி மாலை சூடி உள்ள வீடே நாமாவின் வீடு என அடையாளம் காட்டினர். அவ்வீட்டு வாசலில் நின்று கொண்டு நாமாவின் நண்பன் வந்திருக்கிறேன் என்று கூறினார். வேதனையுடன் இருந்த ராஜாயி, ''எங்கள்ளுக்கு யாரும் நண்பரோ உறவினரோ  இல்லை என்றும். மேலும் எஜமானர் வீட்டில் இல்லை" என கதவின் பின் இருந்தவாறு கூறினாள். இதைக் கேட்ட ஸ்ரீஹரி, "சீக்கிரம் வெளியில் வாருங்கள், என பெயர், கேசவ் சேத், நான் நாமாவின் தோழன். உங்கள் வீட்டில் உணவு இல்லை. நீங்கள் மிகவும் கஷ்டப்படுவதை கேள்வயுற்று தங்க நாணயங்கள் கொண்டு வந்துளேன், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றுக் கூற. உடனே ராஜாளி அவரை வரவேற்று உட்காரும் படி கூற, அவர் கொடுத்த தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டார். மேலும் இருந்து உணவு அருந்திச் செல்லுமாறு வேண்டினாள். அனால் வந்தவர், ''நாமா இல்லாமல் தன் அருந்த விரும்பவில்லை'' எனக் கூறி உடனே சென்று விட்டார். 

இது எதுவும் அறியாத நாமாவின் தாய் கோவிலுக்குச் சென்று ஹரியே சர்வம் என்ற மயக்கத்தில் இருந்த நாமாவை பலவாறு நிந்தித்து வீட்டுக்கு வரும்படி அழைத்தார். தன் நிலை மறந்திருந்த நாமாவிற்கு எதுவும் தெரியவில்லை. நாமாவின் தாய் கோனாய்க்கு பண்டரிநாதன் மேல் கோபம் திரும்பியது. தன் மகனை இறைவன் தன் அடிமை ஆகிக்கொண்டு தன்னையும் அவன் குடும்பத்தையும் கஷ்டத்தில் ஆழ்தியது இந்த பாண்டுரங்கனே என பலவாறு நிந்தித்தால். அவளது மகனின் மேல் உள்ள அன்பே அவளது கோபத்திற்கு காரணம் என அறிந்த பாண்டுரங்கன் அவளை நோக்கி, ''உன் மகனை நி அழைத்துச்செல்'' என்று கூறி மறைந்தார். 

நாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் கோனாய். வீட்டில் மருமகள், ராஜாயி சமைத்து வைத்துக் கொண்டு அலங்கார அணிமணிளுடன். இருந்ததைக் கண்டனர். இருவரும் கரணம் கேட்க, ராஜாயி வந்த வணிகரின் உதவிகளைக் கூறி கணவனின் நண்பனான 'கேசவ சேத்' கொடுத்ததாகக் கூறி தங்க நாணயப் பையை காட்டினார். நாமாவிற்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீ பண்டுரன்கனே தனக்காக, கேசவ சேத் ஆகா வந்துள்ளார் என ஆனந்தக் கண்ணீர் பொங்க கூறினார். மேலும் இந்தத் தங்க நாணயங்களை எல்லோருக்கும் வாரி வழங்குமாறு கூறிவிட்டு, உத்தவரின் மறு அவதாரமான நாம மறுபடி ஸ்ரீ பாண்டுரங்க மகிமைகளைப் பாடிக் கொண்டு ஆலயம் சென்றுவிட்டார்.


ஜெய் ஸ்ரீ நாமதேவ !!